Tuesday, November 26, 2019

தலை குனிந்தவர்களின்
குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்..
தாழ்வு மனப்பான்மையும்
சம்மட்டியடித் தோல்விகளும்
என்னை நீந்தச் சொல்லி
வற்புறுத்துகின்றன..
மிதக்கும் அழுகிய
ஏச்சுக்களின்
தென்னம்பழமொன்றின்
வாடையில்
அடைத்துக்கொள்கிறது
வீரம் தொலைத்த மூச்சு..
மெல்ல
அறிவு பொய்த்துப்போன
அவல உடைகளைக்
களைகிறேன்..
முழுதுமாய்த் தோற்றவனின்
உடல் நடுக்கம்
பாதங்களின்
ஊன்று மண்ணைப்
பறிக்கத் தொடங்க..
வழுக்கிக் குளத்தில் விழுகிறேன்..
தலைகுனிந்தவர்களின்
குளத்தில் நீந்தத் தெரிந்தால்
நீர்பரப்பின் மேல்
தலை நிமிர்ந்தே இருக்கும்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  ஆறு என்பதனுள் வைத்துத்தான் மானுட நாகரீக வரலாறு படைக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ நாட்டின் வாழ்வியல் காவிரி ஆறின் ஓட்டத்தைக் கொண்டே மானுட ஓட...