Sunday, December 1, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்..1+2
ஆன்மீக அனுபவங்களைப் பற்றிய பொதுமதிப்பீடுகள் எதுவாக இருந்தாலும் சுயமதிப்பீடு நேர்மையாக இருந்தால் அரங்கனை கண்டிப்பாக உணரமுடியும்..அரங்கனை அனுதினமும் தியானிப்பவனுடன் அரங்கன் தொடர்ந்து அவனின் மனதுள் சயனித்திருப்பது நிஜம்..பகவான் அர்ஜுனனுடன் யுத்த களத்தில் கூடவே இருந்தும் அர்ஜுனனால் பகவானை முழுவதும் உணரமுடியவில்லை..அர்ஜுனன் பகவானைப் பார்த்துக் கேட்கிறான்...
கதம் வித்யாம்ஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்
கேஷூ கேஷூ ச பாவே ஷூ சிந்த்யோஸி பகவந்தம்யா..!!
அரங்கா..நான் உன்னையே சிந்தித்துக்கொண்டிருக்கையில் நீ எந்த உருவில் என்னுடன் இருக்கிறாய் என்பதை அறியமுடியாமல் தவிக்கிறேன்..உன் உருவங்களில் ஒன்றையாவது எனக்குக் காட்டித்தரமாட்டாயா...?
இது அர்ஜூனனுடைய கேள்வியென்றாலும் கடந்த ஐம்பது வருடங்களாக என் மனதிலும்...எத்தனையோ நூற்றாண்டுகளாக உங்கள் மனதிலும் உள்ள கேள்விதான்..இன்று கும்பகோணம் அருகில் உள்ள கருவளர்சேரி கோவிலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் எனது ஓய்வு வாழ்வின் திட்டமிடாத பணிகளின் திணிக்கப்பட்ட அமைப்பியல் வாழ்வின் மிச்சங்களில் ஒன்றாகிப்போனது...தட்பவெட்ப நிலையின் சாதகமற்ற நிலையிலும் கடும் மழைவெள்ளம் கண்டிப்பாக எதிர்வரும் என்ற சூழலிலும் எனது போர்ட் ஐக்கானைக் கிளப்பிக்கொண்டு..விடியலில் அரங்கனை தியானித்தேன்...அரங்கா உடன் வருவாய்..வேறெதுவும் சொல்லாமல் கவனத்தை வண்டியைச் செலுத்துவதில் செலுத்தினேன்..செங்கிப்பட்டிக்கு சற்று முன்பு...எனது மகிழுந்து நூற்றுப்பத்து கி.மீ வேகத்தில் இருக்க கருடாழ்வார் தாழப்பறந்து வண்டியின் முன் ஒரு வட்டமிட்டு பின் மறைந்து போனார்...தொடர் தூறலில் கும்பகோணம் சாலையை விட்டு திருவாரூர் சாலையில் செல்வதைக்கூட அறியாமல் சாலியமங்கலம் வர உடன் வந்த மாப்பிள்ளை கூகுளில் பார்த்து அப்பா இங்கிருந்து பாப நாசம் வழி செல்லப்போகிறீர்களா எனக் கேட்டவுடன் தான் ...வழி மாறிப்போனது தெரிந்தது..
அதே கூகுளிடம் அவர் வழி கேட்க இது அரங்கன் செயல் என உணர்ந்த நான் அம்மாபேட்டை வழியாக கிராமத்துச் சாலையொன்றின் வழி வலங்கைமான் அடைந்து கருவளர் சேரி அடைந்தோம்..அதுவரை மழையின்றி சிறிது இளவெயிலும் தலை காட்ட பயணம் தடையின்றி இலக்கடைய...கருவளர் சேரியில் வலக்கையை தலைக்குக் கொடுத்தபடி சற்றே தலை தூக்கி என்னைப்பார்த்தார் அரங்கன்...
அஹமாத்மா குடாகேஸ ஸர்வபூதாஸ்யஸ்தித:
ஆஹமாதிஸ்ச மத்யம் ச பூதா நாமந்த ஏவச!!
அர்ஜூனா நான் உன்னிடத்தில் ஆத்மாவாக இருக்கிறேன்..நானே முதலும் நடுவும் முடிவுமாக இருக்கிறேன்..அது மட்டுமல்ல...
ஆதித்யா நாமஹம் விஷ்னுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமா ந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷ்த்ராணாமஹம் ஸஸீ..!!
நான் அதிதியின் புதல்வர்கள் பன்னிரண்டாயும் அதில் மஹாவிஷ்னுவாயும் ஓளிரும் சூரியனாயும் நாற்பத்தொன்பது வாயுதேவர்களுள் தேஜஸ்வியாயும் ..சந்திர மண்டலத்தின் தலைவனான நிலவாகவும் இருக்கிறேன்...
இங்கே கருவளர்சேரியில் இன்று உன்னை வரவழைத்து அருள் தர கொஞ்சம் தலைதூக்கிப் பார்பவனாகவும் இருக்கிறேன்..என்றும் சொல்வதாகப் பட..மனதில் தோன்றிய திவ்ய பிரபந்த பாடல்களை உரத்துச் சொல்லத்தொடங்கினேன்..
அண்ட குலத்திற்கு அதிபதியாகி
அசுரர் ராக்கதரை இண்டகுலத்தில்
எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டகுலத்தில் உள்ளீர் வந்து
அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டை குலத்தைத் தவிர்த்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே...
[பெரியாழ்வார்]
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...