Friday, August 23, 2019

தீவிர வாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஜம்முவில் சுமார் முப்பதாண்டுகளாய் டெண்ட் கொட்டகைகளில் இமயத்தின் சரிவுகளில் சறுக்கல்களில் சகதிகளில் வாழ்வதென்பது சாபமோ விதியோ அல்ல...காஷ்மீரப் பண்டிதர்களுக்கு.. அது இந்த சமுதாயத்தின் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துரோகம் ..ஏறக்குறைய முப்பது லட்சம் பண்டிதர்களின் குடும்பங்கள் நிர்கதியாய்...கல்வி வேலை வாய்ப்பு இளமை இன்பங்கள் அத்தனையையும் துறந்தது மட்டுமின்றி...தங்களின் உரிமைக்குரிய மண்ணை..வீட்டை ...உறவுகளை...வெறும் மதத்தின் பெயரால் இழப்பதென்பது சகிக்க முடியாத கொடுமை என்று சொல்கிறார்..சித்தார்த்தா ஹிஹோ என்ற 47 வயதான இலக்கிய வாதி,,,கவிஞர்..இயக்குனர்..சிறுகதையாளர்...மற்றும் நாவலாசிரியர் என்ற பன்முகத் திறமைவாய்ந்த காஷ்மீரின் இலக்கியப் பொக்கிஷம்...
அவரின் " குடைக்குள் குடியிருக்கும் மனிதன்" என்ற சிறுகதை 2015ல் ஆசியாவின் காமன்வெல்த் அமைப்பின் ஆகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்தது...புது டில்லி பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்ற இந்த அற்புத எழுத்தாளுமையின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ..மொழி பெயர்ப்போ இல்லை...
நினைவுகளென்பது தப்பிதமானது
வரலாற்றின் தவறுகளையும் விட
தப்பிதமானது..
இரவு என்பது
உறங்க அல்ல
என்றான் ஒரு தமிழ் கவி...
எங்கள் இரவுகளில்
கண்களின் நிறம்
உதடுகளின் நிறம்
மூச்சின் நிறம்
தோலின் நிறம்
இவைகள் உறங்கலாம்..
நிறமிழக்காமலிருக்கலாம்..
ஆனால்
நாங்களும்
எங்கள் கனவுகளும்
உறங்குவதில்லை..
உறங்கினாலும்
நிறமிழப்பதில்லை...
காஷ்மீர மலைகளை
விடாமல்
கட்டியணைத்தபடி
உறங்கிக் கொண்டிருக்கும்
உன் கனவிலிருந்து
நான் விலகிவிட்டேன்..
இங்கே
ஜம்முவின்
நிறம்
வேட்டியைப்போல் வெளுத்திருக்கிறது...
லுங்கியணிந்திருந்தால்
ஒருவேளை
காஷ்மீர நிறம்
என் கனவுகளை நிறைத்திருக்கலாம்..
எனினும்
என் நிறமாற்றம்
ஒருபோதும் நிகழ்ந்திருக்காது..
நினைவுகளென்பது
தப்பிதமானது...
நீங்கள் நம்பும்
வரலாறும் கூட...
ராகவபிரியன்
அவரின் ஒரிஜினல் கவிதை...
Midnight
Midnight isn’t what it used to be—
The colour of your eyes,
the satin of your lips,
the still of your breath,
the folds in your skin.
Midnight is gone,
eaten up by the dream I had of you,
the dream in which I turned loyal
when you were not looking,
and you blamed the night
for my disloyalty.
It was the midnight of your dreams
which brought us together
even though we were years apart.
One of us was not around
in the world we know and see.
One of us forgot
who the one was.
Remembrance is false,
falser than Time’s last promise of you.
Midnight isn’t what it used to be—
The colour of your eyes,
the satin of your lips,
the still of your breath,
the folds in your skin.
Siddhartha Gigoo is a film-maker, poet and the author of two books of fiction, The Garden Of Solitude (2011) and A Fistful Of Earth And Other Stories (2015). His short story The Umbrella Man won the Commonwealth Short Story Prize 2015 for Asia.

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...