பின் நவீனம் என்பது நவீனத்தை மறுப்பதோ மறப்பதோ இல்லை..ஆயிரமாயிரமாண்டுகளாய் புரையோடிப்போன இலக்கியம் பற்றிய பார்வைக்குறைபாடுகளை நீக்கி..சரியான பார்வையை சமுதாயத்தின் தற்போதைய நிஜத்தை வண்ணங்கள் கலக்காத பார்வையில் புது வகைமையில் தருவதே என்பது எனது தனிப்பட்ட பார்வை...இதற்காக எனது கட்சியை வலுப்படுத்த நான் எந்த இலக்கிய நீதி மன்றத்திலும் சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதிடப்போவதில்லை..எனது தரப்பு சாட்சியாக அட்லாண்டிக் ஆர்டிக் இந்து மஹா சமுத்திரம் மற்றும் ஏனைய கடலலை கல் வீசிக்கொண்டிருக்கும் நாடுகளின் புகழ்பெற்ற இலக்கியப் பெயர்களை நிறுத்தப்போவதில்லை...
சங்க இலக்கியப் பாடல்கள் நிறைய பின் நவீனச் சிந்தனைகளைக் கொண்டிருந்தது..பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு பாடலில்.." பிரிதல் வல்லியர் இது நத் துறந்தோர்.."என்று...ஒரு வரியை அனாயாசமாக வீசிச் செல்கிறார்..தோழி தலைவியிடம் உன் கூந்தலில் உறங்கிய தலைவன் ஒரு நாளும் உன்னை மறந்தாலும் அந்த உறக்கத்தை மறப்பதில்லை என்று சொல்கிறார்...
பக்தி இலக்கியத்தில் திருமழிசையாழ்வார்...விடம்பயின்ற பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே...என அரங்கனைப் பாடுகிறார்...பாம்பிடம் விடமிருந்தாலும் அதை சரியாக உபயோகிக்க பயிற்சி தேவை என்பதை இன்றைய பயிற்சி எல்லாவற்றிற்கும் தேவை என்ற உத்தியை... எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் பாடியது பின் நவீனம் இல்லையா...
நான் ஆங்கிலம் மற்றும் வேறு எந்த மொழியையும் மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை...வாலி ஒரு பாடலில்.."இவரு இவரு சுவரு சுவரு..."என்று காதலுக்குத் தடையாய் இருக்கும் வில்லனை பற்றி எழுதியிருப்பார்...வைரமுத்துவும் இது போல் நிறைய பாடல் வரிகளைத் தந்திருக்கிறார்...இருந்தாலும் பின் நவீனம் என்றால் அது பிராமணர்களால் வந்துவிடக் கூடாதென்ற ஒருவித மூட எண்ணங்களையும் உள் நோக்கக் கற்பிதங்களையும் உள்ளடக்கி பாரதியைப் புறந்தள்ளி..கண்ணதாசனைக் கொண்டாடுவது..வாலியைப் புறந்தள்ளி வைரமுத்துவைக் கொண்டாடுவது என்ற திராவிட கடவுள் மறுப்பு இயக்கம் தந்த தாக்கத்தால் நிஜமான இலக்கியம் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனப்பாண்மைதான்...சிந்தனைகளின் பின்னங்கள் தான் பின் நவீனம் என்றால் அது உண்மை ஆகாது..நமது வரலாற்று இலக்கியம் அல்லது இலக்கிய வரலாறு குறுகிய பார்வையுடைத்தது...இல்லையெனில்..தி.ஜானகி ராமனை விடுத்து அகிலன் ஞானபீடம் பெற்றிருப்பாரா...போகட்டும்... உங்களுக்காக ஒரு பின் நவீன கவிதை...
திடலருகிலுள்ள சுவரொன்றில்
அணில் தாவியேறுகிறது..
எறும்புகள் எந்தச் சிரமமுன்றி
வரிசையாய் ஏற முடிகிறது..
சில காக்கைகளும் கூகைகளும்
வல்லூருகளும் கூட
சுவரின் உச்சியில் அமர முடிகிறது..
திடலில் எதையோ தேடியலையும்
மயிலொன்று
நொடியில் சுவர் மேல்
அமர்ந்து தோகைவிரிக்கிறது..
திடலையும் சுவரையும்
கம்பி வேலியிட்டு
என்னுடையதென்கிறான் மனிதன்..
சுவரின் மேல்
மனிதனால் சுதந்திரமாகத்
தூங்கக் கட்டிலை
கடுகியிட முடியுமோ...?
ராகவபிரியன்
அணில் தாவியேறுகிறது..
எறும்புகள் எந்தச் சிரமமுன்றி
வரிசையாய் ஏற முடிகிறது..
சில காக்கைகளும் கூகைகளும்
வல்லூருகளும் கூட
சுவரின் உச்சியில் அமர முடிகிறது..
திடலில் எதையோ தேடியலையும்
மயிலொன்று
நொடியில் சுவர் மேல்
அமர்ந்து தோகைவிரிக்கிறது..
திடலையும் சுவரையும்
கம்பி வேலியிட்டு
என்னுடையதென்கிறான் மனிதன்..
சுவரின் மேல்
மனிதனால் சுதந்திரமாகத்
தூங்கக் கட்டிலை
கடுகியிட முடியுமோ...?
ராகவபிரியன்








