Thursday, August 29, 2019

பின் நவீனம் என்பது நவீனத்தை மறுப்பதோ மறப்பதோ இல்லை..ஆயிரமாயிரமாண்டுகளாய் புரையோடிப்போன இலக்கியம் பற்றிய பார்வைக்குறைபாடுகளை நீக்கி..சரியான பார்வையை சமுதாயத்தின் தற்போதைய நிஜத்தை வண்ணங்கள் கலக்காத பார்வையில் புது வகைமையில் தருவதே என்பது எனது தனிப்பட்ட பார்வை...இதற்காக எனது கட்சியை வலுப்படுத்த நான் எந்த இலக்கிய நீதி மன்றத்திலும் சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதிடப்போவதில்லை..எனது தரப்பு சாட்சியாக அட்லாண்டிக் ஆர்டிக் இந்து மஹா சமுத்திரம் மற்றும் ஏனைய கடலலை கல் வீசிக்கொண்டிருக்கும் நாடுகளின் புகழ்பெற்ற இலக்கியப் பெயர்களை நிறுத்தப்போவதில்லை...
சங்க இலக்கியப் பாடல்கள் நிறைய பின் நவீனச் சிந்தனைகளைக் கொண்டிருந்தது..பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு பாடலில்.." பிரிதல் வல்லியர் இது நத் துறந்தோர்.."என்று...ஒரு வரியை அனாயாசமாக வீசிச் செல்கிறார்..தோழி தலைவியிடம் உன் கூந்தலில் உறங்கிய தலைவன் ஒரு நாளும் உன்னை மறந்தாலும் அந்த உறக்கத்தை மறப்பதில்லை என்று சொல்கிறார்...
பக்தி இலக்கியத்தில் திருமழிசையாழ்வார்...விடம்பயின்ற பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே...என அரங்கனைப் பாடுகிறார்...பாம்பிடம் விடமிருந்தாலும் அதை சரியாக உபயோகிக்க பயிற்சி தேவை என்பதை இன்றைய பயிற்சி எல்லாவற்றிற்கும் தேவை என்ற உத்தியை... எவ்விதப் பயிற்சியும் இல்லாமல் பாடியது பின் நவீனம் இல்லையா...
நான் ஆங்கிலம் மற்றும் வேறு எந்த மொழியையும் மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை...வாலி ஒரு பாடலில்.."இவரு இவரு சுவரு சுவரு..."என்று காதலுக்குத் தடையாய் இருக்கும் வில்லனை பற்றி எழுதியிருப்பார்...வைரமுத்துவும் இது போல் நிறைய பாடல் வரிகளைத் தந்திருக்கிறார்...இருந்தாலும் பின் நவீனம் என்றால் அது பிராமணர்களால் வந்துவிடக் கூடாதென்ற ஒருவித மூட எண்ணங்களையும் உள் நோக்கக் கற்பிதங்களையும் உள்ளடக்கி பாரதியைப் புறந்தள்ளி..கண்ணதாசனைக் கொண்டாடுவது..வாலியைப் புறந்தள்ளி வைரமுத்துவைக் கொண்டாடுவது என்ற திராவிட கடவுள் மறுப்பு இயக்கம் தந்த தாக்கத்தால் நிஜமான இலக்கியம் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனப்பாண்மைதான்...சிந்தனைகளின் பின்னங்கள் தான் பின் நவீனம் என்றால் அது உண்மை ஆகாது..நமது வரலாற்று இலக்கியம் அல்லது இலக்கிய வரலாறு குறுகிய பார்வையுடைத்தது...இல்லையெனில்..தி.ஜானகி ராமனை விடுத்து அகிலன் ஞானபீடம் பெற்றிருப்பாரா...போகட்டும்... உங்களுக்காக ஒரு பின் நவீன கவிதை...
திடலருகிலுள்ள சுவரொன்றில்
அணில் தாவியேறுகிறது..
எறும்புகள் எந்தச் சிரமமுன்றி
வரிசையாய் ஏற முடிகிறது..
சில காக்கைகளும் கூகைகளும்
வல்லூருகளும் கூட
சுவரின் உச்சியில் அமர முடிகிறது..
திடலில் எதையோ தேடியலையும்
மயிலொன்று
நொடியில் சுவர் மேல்
அமர்ந்து தோகைவிரிக்கிறது..
திடலையும் சுவரையும்
கம்பி வேலியிட்டு
என்னுடையதென்கிறான் மனிதன்..
சுவரின் மேல்
மனிதனால் சுதந்திரமாகத்
தூங்கக் கட்டிலை
கடுகியிட முடியுமோ...?
ராகவபிரியன்

Monday, August 26, 2019

பின் நவீனச் சிந்தனைகளும் கவிதைகளும் அட்லாண்டிக் பெருங்கடலின் இரு கரைகளில் ஒட்டிக் கிடக்கும் நாடுகளில் அறுபதுகளில் தொடங்கியதாக ஒரு கூற்று இலக்கிய உலகில் இன்னமும் நம்பப்பட்டு வருகிறது..பெரும்பாலும் காதல் உள்ளடக்கிய இலக்கிய வகைமைகளை மரபும் புதியதும் நவீனம் கொண்டிருந்த அதே இலக்கிய வெளிகளில் சமுதாயச் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துக்களும் குழு சாராத..அங்கீகாரங்களுக்கான எழுத்தாக இல்லாமல் புத்தம் புதிய வகைமைகளுடன் நிஜமான மாற்றத்திற்கான சிந்தனைகளைத் தந்த இலக்கியம் உருவானது தமிழ் மொழியில் எனில் நம் தமிழறிஞர்களே ஒப்ப மறுப்பது காலக்கொடுமை...சங்க காலம் ..சங்கம் மறுவிய காலம்..பக்தி இலக்கிய காலம்..தற்காலம்...கி.பி 1800 க்குப் பிறகு இதுவரை..என்றெல்லாம் யார் காலத்திற்கு கட்டம் வரைந்தார்கள் எனத் தெரியவில்லை...1960ல் அட்லாண்டிக் அலைகளால் கரைகளில் பின் நவீனம் வீசப்பட்ட தென்றால்...அது வங்களாக் கடலலைகளால் தென்னிந்திய தமிழ்க் கரைகளில் உறிஞ்சப்பட்டதெனும் உண்மையை எடுத்துச் சொல்ல தமிழைத் தாங்கி நிற்பதாக மார் தட்டும் குழுத் தலைவர்களால் ஏன் முடியவில்லை எனத் தெரியவில்லை...
பண்டித நடையிலிருந்து தமிழை வட்டார வழக்கு நடைவரை மாற்றி.பின்... நவீனம்..பின் நவீனம்...வரை புரட்சி எழுத்துக்களை உலகிற்குக்கு காட்டிய மாயூரம் வேதனாயகம் ..புதுமைப் பித்தன்..பாரதி..திஜா...சுஜாதா..லாசாரா..கிரா..சுந்தர ராமசாமி..அனுத்தமா..அம்பை.. போன்றவர்கள் மிலன் குந்தேராவிற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல..என்று ஏன் சொல்ல திராணியற்றிருக்கிறார்கள் எனப் புரியவில்லை...
இது போன்ற ஒரு இமாயலய இலக்கிய சோகத்துடன் பின் நவீனத்திற்கான மேலைக் கூறுகளை..அதன் தற்போதைய இலக்கிய வகைமைகளை ஆய்ந்து நோக்க..அவை...ஐகோனோகுலொஸம்..அதாவது..பழையவற்றை சிறிதும் ஒத்துக்கொள்ளாமை..க்ரெவுண்ட்லெஸ்...எந்த அடிப்படை இலக்கணங்களும் இல்லாமை..பாப்புலிஸம்..அதிகம் புகழ்பெற்றவர்களால் தரப்படும் ஆகச் சாதாரண எழுத்துக்கள்..முதலிய காரணிகளைக் கொண்டிருக்க வேண்டுமெனத் தெரியவருகையில் அதிர்வின் விளிம்பில் கவிதையும் இலக்கியமும் தளும்பிக்கொண்டிருப்பதைக் காணலாம்..ஆஸிபைட்..அதாவது கருத்து பழக்கம் முதலியவற்றில் உறுதியாக இருக்கும் சில ஆகப்பெரிய பெயர்களின் பின்னால் அணிவகுத்து அவர்களைப்போல எழுதுவது..அல்லது அவர்களால் பெறப்பட்ட முன்னுரையெனும் புகழுரையை பெற்று எழுதுவது போன்றவைகளே பின் நவீனமெனில் மனம் கனத்துப் போய் முதுகெலும்பு வளைந்து ஒரு கவிஞனின்..இலக்கிய கர்த்தாவின் உடலை சற்றே குனியச் செய்துவிடுகிறது...
அவ்வாறு குனிந்து எழுதிய ஒரு பின் நவீன கவிதையை உங்களுக்காகத் தருகிறேன்..
காப்பிப்பொடி வாங்கிய
ரசீதுகளைச் சேர்த்துக் கொடுத்தால்
பில்டர் தருகிறார்கள்..
இரண்டு கிலோ எனில்
சாவிக் கொத்து...
மூன்று கிலோ எனில்
டிபன் பாக்ஸ்..
நாங்கள் இதுவரை
நாற்பது கிலோவரை
காப்பிப்பொடி வாங்கிவிட்டோம்..
அந்த ரசீதுகளின்
பின் பக்கத்தில்
மனைவியின் பெயரை
எழுதிக் கொடுத்தால்..
அப்பளக் குழவியொன்றை
ஜிகினாக் காகிதம் சுற்றித்
தருகிறான்..
நாளையிலிருந்து
நான் தேனீருக்குத்
தாவிவிட்டேன்...
ராகவபிரியன்

Sunday, August 25, 2019

ஒரு பனவனின் ஆன்மீக பால்ய நினைவுகள்..
பிறர்கென வாழ்த்தீ நீ யாகன் மாறே ...என்று பதிற்றுப்பத்தில் பாலை கெளதமனார் சொல்கிறார்..பிறர்கென வாழ்தல் கடினம்..தனக்கென வாழ்தலும் தான்..என் திருப்பராய்த்துறை வாழ்வு திடுமென முடிந்து நாங்கள் ஒரு மாட்டு வண்டியில் திருவரங்கம் வந்த கதையை எழுதியிருக்கிறேன்..திருவரங்கத்திலிருந்து திருச்சிக்கு என்னையும் என் அண்ணனையும் அழைத்துக்கொண்டு செயிண்ட் ஜோஸப் உயர் நிலைப்பள்ளிக்கு வருகிறார் என் தந்தை..அங்கே எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை...உடனே எதிரே இருந்த நேஷனல் பள்ளியில் என் அண்ணன் பத்தாம் வகுப்பிலும் நான் எட்டாம் வகுப்பிலும் சேர்ந்தோம்..என் தந்தை எவ்வளவு மன்றாடியும் என்னை எட்டாம் வகுப்பில் ஆங்கில மீடியத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்..அப்போதைய தலைமை ஆசிரியர் திரு சுவாமிநாதன் அவர்கள்..
ஒரு குழந்தையின் பிடிவாதம் காரணிகளற்றது..நான் அன்று வகுப்பிற்குச் செல்லாமல் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்தேன்..என் பாட்டியிடம் நடந்ததைச் சொன்னேன்..என் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீரைத் துடைத்தபடியே..ஏன்டா..இதுக்கா அழற..ரெங்கனாதரண்ட சொல்லுடா..இங்கிலீஷ் மீடியம் இல்ல..நீ கேட்டதனைத்தையும் தருவார்டா..என்று சொல்லி...என் தந்தையையும் வைது கொண்டே இருந்தார்..உடனே ஓடினேன்..அரங்கனின் சந்நிதி அன்று பக்தர்களுக்காக திறந்தே இருந்தது...யாரும் எப்போது வேண்டுமானாலும் அரங்கனை தரிசிக்கலாம்..தற்போது தீர்த்தம் கொடுக்கப்படும் இடத்தருகில் அமர்ந்து கண் மூடி..ரெங்கா..ரெங்கா...என்று அழைத்துக்கொண்டிருந்தேன்..எவ்வளவு நேரமெனத் தெரியவில்லை..ஒரு பட்டர்..எழுப்பி தீர்த்தம் தந்து...சின்ன வயசுல என்ன பிரச்சனை...எல்லாம் ரெங்கன் பார்த்துப்பன்..போடா..போய் ஒழுங்கா படி..என்று சொல்லி அனுப்பி வைத்தார்..
வீடு வந்தேன்..எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..நானும் அதை மறந்தே போனேன்..மறு நாள் காலை என் அண்ணனுடன் பள்ளிக்கு வந்தேன்..என்னை தமிழ் மீடியத்தில் அமரச் சொன்னார்கள்..நான்கு பீரியடுகள்..பிடிப்பில்லாமல் கடைசீ பெஞ்சில் அமர்ந்திருந்தேன்..வகுப்பு புதிது..மாணவர்கள் புதிது..ஆசிரியர்கள் புதிது..என்ன செய்வது...உணவு இடைவேளையில் என் அண்ணனுடன் தயிர் சாதம் சாப்பிட்டேன்..மனம் முழுவதும் ரெங்கா.. நான் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கும் தகுதியற்றவனா...என்று இனம் புரியாத வார்த்தைகள் ஓடிக்கொண்டிருக்க...மதிய வகுப்புகளின் தொடக்க மணியடித்தது...
எங்கிருந்தோ என்னொத்த சிறுவன் ஒருவன் வந்தான்..என் அண்ணனும் உடனிருக்க...தம்பி..நீ எட்டாவது இங்கிலீஷ் மீடியம் தானே..இதோ..இந்த வகுப்பில் அமர்ந்துகொள் என்று சொல்ல... நானும் உள்ளே சென்று அமர்ந்து கொண்டேன்..வகுப்பாசிரியர்...டேய் நீ என்ன நியூ அட்மிஷனா..என்றார்...ஆமாம் என்றேன்..என் பெயரை வருகைப் பதிவேட்டில் எழுதிக்கொண்டார்...நானும் பதினோராம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்தேன்...யாரும் எந்த சந்தேகமும் எழுப்பவில்லை..
பிறகான ஒரு பிரக்ஞை நாளில் அந்தச் சிறுவன் யாரெனத் தேடினேன்..இன்று வரை..அந்த முகம் என் கண்ணில் தென்படவில்லை...
அந்நாட்களில் அரங்கனிடம் பேச பிராகிருத மொழியில் உரையாடுவார்களாம்..ஆனால் எனது தமிழ் வேண்டுதலுக்காக திருவரங்கத்திலிருந்து நேஷனல் பள்ளிவரை நடந்து வந்த அரங்கனின் திருப்பாதங்களை நோகச் செய்த என் சுய நலம் என்னை இன்றும் கூட தலை குனியச் செய்யும்...அது போன்ற கழிவிரக்க நாட்களில் ஆச்சாரியனின் பாடலொன்று என் நினைவில் வரும்...
ஹிய யேஸு தேசியாணம்
ஜண்ஹை லஹாரீஸூ பண்ணச்ந்தோ வ்வபுடொ..
கலுஸ ஜலேசூவ ஹம்ஸோ
ஜஸாய கபுறே ஸூடாஸி அச்சுயணகணம்..
ஹ்ருதயேஷூ தேடிகா நாம்
ஜாஹ் நவீ லஹரீஷீ பூர்ணசந்த்ர இவஸ்ப்புட:
கலுஷ ஜலேஷ்விவ ஹ்மஸ
கஷாய கர்ப்புரேஷீ திஷ்ட்டஸ்யச்யுதந க்ஷணம்..
[ஆச்சார்யன் நிகம்மாந்த மஹா தேசிகன்}
என்னளவில் இதற்கான பொருள்..அடியவர்களை கைவிடாத தெய்வ நாயகனே..கங்கையின் அலைகளில் தெரியும் பூர்ண சந்திரனின் முகம் போல் தெளிவானது ஆச்சார்யர்களின் முகம்..அது போல் மனம் தெளிவான அடியவர்களின் வேண்டுதல்களை உடனே செய்ய ஓடி வருகிறாய்..ஆனால் கலங்கிய நீரில் அன்னப் பறவை ஒரு நிமிடம் கூட நிற்காதது போல்..தூய்மையற்ற உள்ளம் கொண்டவர்களின் குற்றங்களை நீ மன்னிப்பதில்லை..அவர்களிடமிருந்து நீ விலகிவிடுகிறாய்...எனவே உள்ளத் தூய்மை மிகவும் முக்கியம்..உன்னுடைய பூஜைகளைச் செய்பவர்களுக்கு கட்டுப்பாடும் நம்பிக்கையும் உளத் தூய்மையும் அவசியம்..எங்கே உன் பூஜைகளைச் சரியாகச் செய்யவில்லையோ...அவ்விடத்தில் நீ ஷண நேரம் கூட இருப்பதில்லை...
அரங்கன் திருவடிகளே சரணம்...ஆச்சார்யன் திருவடிகளே...சரணம்...
வணக்கங்களுடன்..அன்பன்..ராகவபிரியன்

Friday, August 23, 2019

தீவிர வாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஜம்முவில் சுமார் முப்பதாண்டுகளாய் டெண்ட் கொட்டகைகளில் இமயத்தின் சரிவுகளில் சறுக்கல்களில் சகதிகளில் வாழ்வதென்பது சாபமோ விதியோ அல்ல...காஷ்மீரப் பண்டிதர்களுக்கு.. அது இந்த சமுதாயத்தின் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துரோகம் ..ஏறக்குறைய முப்பது லட்சம் பண்டிதர்களின் குடும்பங்கள் நிர்கதியாய்...கல்வி வேலை வாய்ப்பு இளமை இன்பங்கள் அத்தனையையும் துறந்தது மட்டுமின்றி...தங்களின் உரிமைக்குரிய மண்ணை..வீட்டை ...உறவுகளை...வெறும் மதத்தின் பெயரால் இழப்பதென்பது சகிக்க முடியாத கொடுமை என்று சொல்கிறார்..சித்தார்த்தா ஹிஹோ என்ற 47 வயதான இலக்கிய வாதி,,,கவிஞர்..இயக்குனர்..சிறுகதையாளர்...மற்றும் நாவலாசிரியர் என்ற பன்முகத் திறமைவாய்ந்த காஷ்மீரின் இலக்கியப் பொக்கிஷம்...
அவரின் " குடைக்குள் குடியிருக்கும் மனிதன்" என்ற சிறுகதை 2015ல் ஆசியாவின் காமன்வெல்த் அமைப்பின் ஆகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்தது...புது டில்லி பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்ற இந்த அற்புத எழுத்தாளுமையின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ..மொழி பெயர்ப்போ இல்லை...
நினைவுகளென்பது தப்பிதமானது
வரலாற்றின் தவறுகளையும் விட
தப்பிதமானது..
இரவு என்பது
உறங்க அல்ல
என்றான் ஒரு தமிழ் கவி...
எங்கள் இரவுகளில்
கண்களின் நிறம்
உதடுகளின் நிறம்
மூச்சின் நிறம்
தோலின் நிறம்
இவைகள் உறங்கலாம்..
நிறமிழக்காமலிருக்கலாம்..
ஆனால்
நாங்களும்
எங்கள் கனவுகளும்
உறங்குவதில்லை..
உறங்கினாலும்
நிறமிழப்பதில்லை...
காஷ்மீர மலைகளை
விடாமல்
கட்டியணைத்தபடி
உறங்கிக் கொண்டிருக்கும்
உன் கனவிலிருந்து
நான் விலகிவிட்டேன்..
இங்கே
ஜம்முவின்
நிறம்
வேட்டியைப்போல் வெளுத்திருக்கிறது...
லுங்கியணிந்திருந்தால்
ஒருவேளை
காஷ்மீர நிறம்
என் கனவுகளை நிறைத்திருக்கலாம்..
எனினும்
என் நிறமாற்றம்
ஒருபோதும் நிகழ்ந்திருக்காது..
நினைவுகளென்பது
தப்பிதமானது...
நீங்கள் நம்பும்
வரலாறும் கூட...
ராகவபிரியன்
அவரின் ஒரிஜினல் கவிதை...
Midnight
Midnight isn’t what it used to be—
The colour of your eyes,
the satin of your lips,
the still of your breath,
the folds in your skin.
Midnight is gone,
eaten up by the dream I had of you,
the dream in which I turned loyal
when you were not looking,
and you blamed the night
for my disloyalty.
It was the midnight of your dreams
which brought us together
even though we were years apart.
One of us was not around
in the world we know and see.
One of us forgot
who the one was.
Remembrance is false,
falser than Time’s last promise of you.
Midnight isn’t what it used to be—
The colour of your eyes,
the satin of your lips,
the still of your breath,
the folds in your skin.
Siddhartha Gigoo is a film-maker, poet and the author of two books of fiction, The Garden Of Solitude (2011) and A Fistful Of Earth And Other Stories (2015). His short story The Umbrella Man won the Commonwealth Short Story Prize 2015 for Asia.

Saturday, August 17, 2019

A jumping pest was
simply flying
with great grit and speed
near my dinner plate
studded with
variety of flora and fauna ..
In one of the hands
of the pest
a sanjeevi mountain
could be seen by me..
The statics and dynamics of the
furious wife prepared dinner
lying on the war ground
without any life..
A war without fire
and a dinner without a jump
is nothing but an empty barrel..
If not a healthy quarrel..
Now the pest
simply on a next mission..
A small jump for the pest
might have been..it..
But a giant leap
for my wife
who had thrown a sharp edged
sambar tumbler vessel
not on me
but on the pest..
Now the fainted
Elakkuvana
got up from inside me
and emptied the
dinner plate...
There is no pest
No war
No fire...
or barrel or quarrel..
Shell shocked....
Ragavapriyan Thejeswi

Tuesday, August 13, 2019

The peaks of Himalays at kashmir
got the names solemnized by you..
The names for our children too..
A few influential families
in connivance with militants
killed pandits sikhs and muslims too
for their narrow selfish benefits..
We some two lakhs pandits and sikhs
and some muslims
resettled throughout India..
Our peaks never cover with snow
by keeping a hindu or muslim or sikh
on its top..
Our lake and boat houses
never tilt when a pandit or muslim or sikh
board on it..
our apples fruits and the beauty
couldn't be conquered by religion or race or time..
We are now coming back..
We want peace
We want pride
We want food
We want our identity
and language..
We want our mobiles ..
We never mind the
Change of the state
into UT...
Peace is always a beauty...
Ragavapriyan Thejeswi

Sunday, August 11, 2019

பிரமாணங்களுக்கு அளவை வாதம் என்ற பெயரும் உண்டு..சைவம் வைணவம் போன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே கருதப்பட்டது பிரமாணங்கள்.நமது மதத்தின் தொன்மையின் அளவை அளவிடமுடியாத ஆச்சரியங்களில் பக்தியின் மூலம் அரங்கனைக் காணும் ஒரு பிரமாணமும் உள்ளதென்பது இன்னுமொரு அதிசயம்தான்..
அர்ச்சா மூர்த்தியாய் அவதரித்திருக்கும் அரங்கன் பக்தர்களுக்காக கோவில்களில் பசித்தேயிருக்கிறான்..நிஜமான நியமான பூஜைகளாலும் அவன்மீதான நம்பிக்கையுடன் பூஜிப்பவர்களுக்காக அவன் தனக்கு மனிதர்கள் செய்யும் அபச்சாரங்களையும் ஓரளவு பொறுத்துக்கொள்கிறான்..பரமாத்மாவான அரங்கனே அண்டசராசரங்களுக்கும் தேவர்களுக்கும் அரசன்..அனைத்து ஜீவராசிகளும் அவனின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன..இதை ஆணவத்தாலும் மமதையாலும் அலட்சியத்தாலும் உணராத ஜீவராசிகளும்..மனிதர்களும்..ஏன் தேவர்களும் வீழ்ச்சியையே அடைகிறார்கள்..இதையும் அரங்கனே தன் வாயால் சொல்கிறான்..
அஹம் ஹி ஸ்ர்வயஜ் ஞா நாம் போக்தா ச ப்ரபுரேவச!
நது மாமபி ஜா ந ந் தி தத்வே நாதஸ்ஸ்யவந்தி தே!!
இங்கே வீழ்ச்சியென்று அரங்கன் சொல்வது மீண்டும் பிறவியெடுப்பது தான்..அரங்கனே இந்திரன் பிரம்மன் யமன் பிரஜாபதி இன்னபிற தேவர்களையும் தேவதைகளையும் அவரவரின் பணிக்காக நியமிக்கிறான்..அவனின் கோவில் பூஜைகளைச் செய்பவர்களையும் அவனே நியமிக்கிறான்..இதை அறியாத மனிதர்கள் ஆணவமென்னும் மாயையால் தாங்களாகவே தங்களுக்குத் தகுதியிருக்கிறதென நினைத்து அரங்கனின் பூஜையில் ஈடுபட்டு அபச்சாரங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்..எல்லா யாகங்களையும் ஏற்றுக் கொள்பவனும் தேவர்களையும் அனைத்து ஜீவராசிகளையும் அண்ட சராசரங்களையும் ஆளும் பரமாத்மாவானவனுமான அரங்கனை தத்துவ ரீதியாக அறியாதவர்கள் கண்டிப்பாக வீழ்ச்சியடைவார்கள் என்றே மேற்சொன்ன ஸ்லோகத்தில் அரங்கன் சொல்லிக்கொண்டிருக்கிறான்..
அரங்கன் தனக்குப் பசிக்கிறதென சொல்வதின் தத்துவம் அறியாதவர்களும்..தனக்கான எட்டு கால பூஜைகளில் சமரசம் செய்து கொண்டு மிருஷ்ட்டா பூஜையை செய்யாமல் தவிர்ப்பவர்களும் எனக்கான பூஜைகளைச் செய்யும் தகுதியிழந்துவிடுகிறார்கள்…எனது அர்ச்சா மூர்த்தியை நியமங்களின்றி தொட்டு எனக்குச் சூட்டப்படும் பக்தர்களின் எண்ண மாலைகளை அவசரகதியில் கழற்றி வீசியெறிபவர்களை நான் எனது பக்தர்களின் விரோதிகளாகவே பாவிக்கிறேன் என்றும் சொல்கிறார்..
அரங்கன்..
யாந்தி தேவவ்ரதா தேவா ந் பித்ரூ ந்யாந்தி பித்ருவ்ரதா
பூதா நி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜி நோபி மாம்
என் கோவிலில் இருந்துகொண்டு தேவதைகளை தேவர்களை வழிபடுகிறார்கள்..பித்ருக்களை வழிபடுகிறார்கள்..பூதங்களை வழிபடுகிறார்கள்..என்னை அலட்சியம் செய்கிறார்கள்..ஆனால் என் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என்னையே மானசீகமாக பூஜிப்பதால் அவர்கள் வெற்றிபெற்று என்னை வந்தடைகிறார்கள்..எனக்கு பூஜை செய்யும் தகுதிகளில் முதல் தகுதி என் மீதான நம்பிக்கையும் நியமங்களைக் கடைபிடிக்கும் மன உறுதியும் என்மீதான அசைக்க முடியாத பக்தியும் .ஆகும்..அவ்வாறானவர்கள் முதலில் என் பக்தர்கள்..அவர்கள் ஒரு நாளும் என் பக்தர்களை நிந்திப்பதில்லை…ஆனால் என் பக்தர்களின் நம்பிக்கையை பொருட்படுத்தாமல் என் அர்ச்சாமூர்த்திக்கு பூஜைசெய்யும் வாய்ப்பு கிடைத்த ஆணவத்தால் என் கோவிலில் தேவதைகளையும் பூதங்களையும் பித்ருக்களையும் பூஜை செய்பவர்கள் ஒருக்காலும் என்னை வந்தடைவதில்லை..மாறாக எனக்கு அபச்சாரத்தையே செய்கிறார்கள்..நான் அரண்மனைகளின் அக்கார அடிசிலை விரும்பாதவன் என்பதை நிரூபித்திருக்கிறேன்..விதுரரின் வீட்டில் கஞ்சியை எனக்குப் படைத்தாலும் அதுவே என் பிரசாதமாகி அண்டசராசரங்களின் பசியைப் போக்கிவிடும் என்பதையும் செய்து காட்டியிருக்கிறேன்..என்று சொன்ன அரங்கன்
துரியோதனன் விருந்துக்கு அழைத்தும் மறுத்துவிட்ட பரமாத்மாவானவனிடம் ஆணவத்துடன் காரணம் கேட்கிறான்..அரங்கன் எனக்கு பசியே இல்லை..என்று சொல்லி
ஸம்ப்ரீதிபோஜ்யாந் நா நி ஆபத்போஜ்யா நி வா பு ந:
ந ச ஸ்ம்ப்ரீயஸே ராஜ ந் ந சைவாபத் கதாவயம்
மிருஷ்ட்டா பூஜை எவ்வளவு உயர்ந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததும் என்பதை உணர்தியதோடல்லாமல்..விதுரர் வீட்டில் அவர் எதிர்பார்க்காமல் சென்று அங்கிருந்த ஆறிய கூழைக் குடித்து..அர்ச்சையின் பசி எவ்வளவு பெரிதென்பதையும் உணர்த்தியிருக்கிறார்…அரங்கன் பூஜையில் நேரந்தவறாமையும் கட்டுப்பாடும் நியமங்களும் மிக மிக முக்கியம்..அதைக் கடைபிடிக்காதவர்கள்..அதிலிருந்து விலகிக்கொண்டால்..அர்ச்சா மூர்த்தியாய் அரங்கன் கொலுவிருக்கும் ஊருக்கு வரும் கெடுதல்கள் தடுக்கப்படலாம்…துரியோதணனின் ஆணவம் கெளரவ சாம்ராஜ்யம் விழக் காரணம் என்பது மட்டுமல்ல..பரமாத்மாவை அலட்சியம் செய்ததும் அவனின் வீழ்ச்சிக்கு மூல காரணம் என்பதும் புராணங்கள் நமக்குச் சொல்லும் வாழ்வின் வழிகள்…அளவை வாதமெனும் பிரமாணங்கள்…அதாவது அரங்கனின் ஆணை என்ற பொருளிலும் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்..
அரங்கன் திருவடிகளே சரணம்..ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…
அன்பன்..ராகவபிரியன்

Saturday, August 3, 2019

The elephant is ignorant
Though mighty it could
walk along with a blind.
The owl is always vigilant
not even sleeping through night.
The sage is rich in mind
but poor in every thing
The Almighty is answering the call
but the devotee is deaf..
The child is always a rose
but the thorns are in the hands
of haters..
The orator must be energetic in knowledge
if not..audience section will be empty..
The eyes are seeing pleasure and pains
but the uniqueness is rest with the person..
Desire is an elephant guided by
blind perceptions where on it
feeling owls sleeping during day time..
you could see...
The child, Almighty, sage and orators
are creation of desire and perceptions..
you could never deny..
Ragavapriyan Thejeswi

Friday, August 2, 2019

I sat for a meditation..
At the end i want to see the GOD..
It required severe perseverance..
One small ant started morning walk
on my thighs...
One helicopter's zooming sound
coming from the skies..
My wife with a scintillated noise
had put the coffee tumbler..
My eye lids adamantly tried its best
to see the lodestar..
Even then I sat for a meditation
At the end i ll definitely see GOD
Certain positions ..certain breaths..
Certain reservations must co operate..
Thats all..
But the ant had now reached
the stomach..
And the omni present directed me
to do Rajayoga..
Ragavapriyan Thejeswi

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...