Tuesday, March 20, 2018

சுந்தர ராமசாமியும் ராகவபிரியனும்

பெரும்பாலும் இலக்கிய சர்ச்சைகளை நான் தவிர்த்து வருகிறேன்...?ஆனால் எழுத்தாளர்கள் ஒரு பக்கமும் காலச்சுவடு கண்ணன் மறுபக்கமும் இருந்து வாள் வீசிக்கொண்டிருக்கும் இந்தக் கொலைக்களத்தில் நிராயுதபாணியாய் இப்போது நானும் நுழைகிறேன்...இது வரை ஒரே ஒரு ஆன்மிக விருத்தப்பாடல் புத்தகமொன்றை மட்டுமே வெளியிட்டு...ஏறகுறைய நாற்பது ஆண்டுகளாக ஒரு இலக்கிய புத்தகம் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன்...ஒரு முறை ஆசான் சுந்தர ராமசாமி அவர்களை பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் சந்தித்து எனது கவிதைப் புத்தகத்தை காலச்சுவட்டின் மூலம் வெளியிட வேண்டும் என்ற ஆவலைச் சொன்னபோது...உங்களின் முதல் புத்தகம் எங்களால்தான் வெளிவரும் என்று உறுதியளித்தார்...ஆனால் அரங்கன் திருவருள்...பிறகு அவரைச் சந்திக்கவே முடியவில்லை.....கடந்த ஆண்டு எனது சில தேர்ந்தெடுத்த கவிதைகளை காலச்சுவட்டிற்கு அனுப்பினேன்...நண்பர் கண்ணன் அவர்களிடமும் தொலைப்பேசியில் உரையாடினேன்...அவரின் அணுகு முறை நிதர்சனமாகவும் உண்மையாகவும் இருந்தது. கொஞ்சம் பொறுங்கள்...உங்கள் படைப்புகளையும் காலச்சுவடு வெளியிடும் என்றார்...இப்போதைய சர்ச்சையில் கண்ணனைக் குறை சொல்வதை ஏற்க முடிய வில்லை....தமிழ் எழுத்தாளர்களின் மேல்..அவர்களின் படைப்புகளின் மேல்..அவர்களின் வளர்ச்சியின் மேல் நண்பர் கண்ணனுக்கு இருக்கும் கவணமும் அக்கரையும் நான் அறிவேன்...ஆசான் சுந்தர ராமசாமி அவர்களால் வளர்க்கப்பட்டவர் கண்ணன்..என் படைப்புகளை அவர் வெளியிடப்போகிறாரா இல்லையா என்பதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை...அதற்காகவும் இதை எழுதவில்லை...என் படைப்புகளின் ஊர்வலத்திற்கு அரங்கன் தலைமையேற்று வருவான் என்ற நம்பிக்கை யிருக்கிறது....நாளை எனது படைப்புகள் நாட்டுடமையாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது....எது என்னைக் காயப்படுத்துகிறது...எனில்..ஜெயமோகனும் சோ.தருமனும் இன்ன பிறரும்...ஆசான் சுந்தர ராமசாமியாலும் காலச்சுவட்டாலும் தான் உலகறியப்பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே...தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்...கண்ணன் மறுபடியும் வெல்வார்....நண்பர்கள் மன்னிக்கவும்...அன்பன்...ராகவபிரியன்

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...