ஒர் கூட்டுக்கான சுள்ளிபொறுக்கும்
தேன் சிட்டின்
அலகு சுமையாகிவிடுகிறது..
தேன் சிட்டின்
அலகு சுமையாகிவிடுகிறது..
அதன் தெருக்களில்
பிரயாசைகள்
விரையும் வாகனங்களினடியில்
சிக்கிக் கிடக்கின்றன..
பிரயாசைகள்
விரையும் வாகனங்களினடியில்
சிக்கிக் கிடக்கின்றன..
கூடென்பது கூடாத பொழுதுகளின்
பெருஞ்சுமை..
பெருஞ்சுமை..
இறகும் அலகும் உரசும்
தெய்வீக கணங்களில்
கந்தர்வர்களின் நிழற்சாபம்
விட்டத்தின் இடுக்குகளில்
சுள்ளிகளாய்ச் சேர்கின்றன..
தெய்வீக கணங்களில்
கந்தர்வர்களின் நிழற்சாபம்
விட்டத்தின் இடுக்குகளில்
சுள்ளிகளாய்ச் சேர்கின்றன..
வீட்டுரிமையாளரின் விரட்டல்களில்
எங்கள் வாரிசின்
புறப்பாட்டிற்கான தூக்கம்
கலைகிறது..
எங்கள் வாரிசின்
புறப்பாட்டிற்கான தூக்கம்
கலைகிறது..
சிறகடித்து அமரும்
கிளைகளை
காளவாயிலடுக்க
வெட்டிக் கொண்டிருக்கையில்..
கிளைகளை
காளவாயிலடுக்க
வெட்டிக் கொண்டிருக்கையில்..
உதிரும் சுள்ளிகளை
நாங்கள் உதாசீனப் படுத்துகிறோம்..
நாங்கள் உதாசீனப் படுத்துகிறோம்..
விட்டங்களற்ற
இன்றைய வீடுகளில்
எங்கள் சிறகின் புனிதசப்தத்தை
வீணடிப்பதில்லை..
இன்றைய வீடுகளில்
எங்கள் சிறகின் புனிதசப்தத்தை
வீணடிப்பதில்லை..
எங்களின் ரகசிய பொழுதுகளில்
கூட்டிற்கான திட்டங்களை
ஒத்திவைத்து விடுகிறோம்..
கூட்டிற்கான திட்டங்களை
ஒத்திவைத்து விடுகிறோம்..
எங்களை தடுக்கும்
கதவுகளை மூடிவிடுங்கள்..
கதவுகளை மூடிவிடுங்கள்..
கூடென்பது எங்களுக்கு மட்டுமல்ல
உங்களுக்கும் பெருஞ்சுமை...
ராகவபிரியன்
உங்களுக்கும் பெருஞ்சுமை...
ராகவபிரியன்

No comments:
Post a Comment