RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Tuesday, November 28, 2017
எங்கள் பேருந்து நிலையத்தின் உடைந்த இருக்கையின் மீதேறி விளையாடுகிறது வீடற்ற தமிழ்பேசும் குழந்தை அதை ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்துறைத் தலைவருக்காக கொண்டு செல்வீர்களா...? கோவிலில் தரிசனம் முடித்து கோபுர மண்டபக் கருங்கல் சங்கப்பலகையில் தமிழ் பேசிச் சிரிக்கிறாள் எங்கள் வீட்டுப்பெண்... அதையாவது கொண்டுசென்று அங்கே வைப்பீர்களா...? எங்கள் பேருந்தில் பயணம் செய்த தமிழ் மூதாட்டியின் முதுகுத் தண்டுடைத்த இருக்கையையாவது தலைவருக்குத் தருவீர்களா...? வேலைவாய்ப்பற்ற எங்கள் தமிழ்மொழிவழி பயின்ற பட்டதாரி இளைஞர்கள் இரவு முழுவதும் தமிழில் பேசித் தீர்த்த கிராமத்து சுமைதாங்கி இருக்கையையாவது ஹார்வேர்டில் வைப்பீர்களா... புரியவில்லை... ஹார்வேர்டின் தமிழ் இருக்கையில் தமிழ் இருக்குமா....? ராகவபிரியன்
Subscribe to:
Post Comments (Atom)
கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...
-
முந்திரிப் பொங்கல்...சிறுகதை.. பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
No comments:
Post a Comment