அரங்கன் திருவடிகளே சரணம்..அன்பன்..ராகவபிரியன்
நிமிரமுடியாத வில்லெழுத்து
எனக்கென எழுதமுடியவில்லை..
எனது எழுத்துக்களுக்கு
மொழிகட்டுப்படுவதில்லை..
மொழியின் நாக்குகள்
என் எழுத்துக்களை
பல்லிடுக்கில் அதக்கிக்கொள்கின்றன..
எதை எழுதுவது
எதை விடுவது
எதை அணிவது
எதை நிர்வாணமாக்குவது
எனும் வானவில்
என் வானில் திடீரென
முளைக்கிறது..
வண்ணங்களைப் பிரித்தெடுக்கும்முன்
கண நேரம் நிமிர்ந்துவிட்டு
சட்டென
மறைந்து போய்விடுகிறது..
வண்ணங்களை
நான் உருவமுடியாதவனாகி
எழுதமுடியாமலாகிறேன்..
நிமிர்தல் எழுத்திலும்
வில்லிலும்
நாணில் பிணைக்கப்பட்டிருக்கலாம்...
அதனால்தான்
குனிந்தபடி
எனக்கென எழுதமுடியவில்லை...
ராகவபிரியன்
ராகவபிரியன்
This comment has been removed by the author.
ReplyDelete