Saturday, July 10, 2021

 வேகமெனும் பூச்சி

உன்னுள்
எப்படி
திடீரென உருக்கொள்கிறது?
விரிக்க முடியாத
வாழ்வின் சாலையில்
ஏன்
அதிவேகம் கூட்டி
அப்படிச் செல்கிறது?
சாலையை அகலப்படுத்துதல்
சரளைகளை கொட்டி சமனித்தல்
தார் உருக்கி ஊற்றி
சக்கர நகர்விற்காக
தயார் செய்தல்
உன் ஆன்மா பார்த்திராதா
குருட்டுச் செயல்களா...?
உன் சக்கரங்களை
சுழலச் செய்வதில்
குழப்பமற்றிருக்கிறாயா...
உன் ஆணவமோ அறிவோ
கட்டுப்பாட்டிற்குள்
வைக்கப்பட்டிருக்கிறதா...?
உன் அனுபவமும் தியாகமும்
வேகமாணியில்
படிப்படியாய் மேலெழும்பி
உச்சம் தொட்டிருக்கிறதா?
இதெதுவும்
இல்லாத ஒரு பூச்சியை
நீயாக உருவாக்கி
சாலையில்
பறக்க விட்டிருக்கிறாய்?
பார்

இப்போது
சாலையில் பயனிப்போரின்
பார்வையில்
ஆகச் சிறிய பூச்சியாய்....நீ
ராகவபிரியன்


No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...