வேகமெனும் பூச்சி
உன்னுள்
எப்படி
திடீரென உருக்கொள்கிறது?
விரிக்க முடியாத
வாழ்வின் சாலையில்
ஏன்
அதிவேகம் கூட்டி
அப்படிச் செல்கிறது?
சாலையை அகலப்படுத்துதல்
சரளைகளை கொட்டி சமனித்தல்
தார் உருக்கி ஊற்றி
சக்கர நகர்விற்காக
தயார் செய்தல்
உன் ஆன்மா பார்த்திராதா
குருட்டுச் செயல்களா...?
உன் சக்கரங்களை
சுழலச் செய்வதில்
குழப்பமற்றிருக்கிறாயா...
உன் ஆணவமோ அறிவோ
கட்டுப்பாட்டிற்குள்
வைக்கப்பட்டிருக்கிறதா...?
உன் அனுபவமும் தியாகமும்
வேகமாணியில்
படிப்படியாய் மேலெழும்பி
உச்சம் தொட்டிருக்கிறதா?
இதெதுவும்
இல்லாத ஒரு பூச்சியை
நீயாக உருவாக்கி
சாலையில்
பறக்க விட்டிருக்கிறாய்?
No comments:
Post a Comment