Thursday, September 26, 2019

புனிதத்தின் வாசம் அடைக்கப்பட்ட
பொடியொன்றை
ஆன்ம மனதின்
கூம்புவடிவ சிறு கூண்டில்
அடைக்கிறேன்..
தூபக் காலில் கவிழ்க்கப்பட்ட
கூம்பின் முனையில்
பிரபந்தச் சப்தமெழுப்ப
முனை பற்றி
வாசப் புகை நடனமிடத் தொடங்கியது..
புகையின் கோட்டோவியங்களில்
உச்சிரவஸை
சுட்டு வீழ்த்தினான்
ஒரு கடவுள் மறுப்பாளன்..
அவன் கவிஞனாம் வேறு..
கடவுள் படங்களென
மாட்டப்பட்டிருந்த
குதிரை லாயமொன்றின்
வாசலில்
தூபப் புகை சூழும்
இடமற்ற
செயற்கை அடர்வில்
மனமகிழுந்துவை
நிறுத்த முடியாமல்
இங்கும் அங்குமாய்
திருப்புகிறேன்..
பாதையில் நிறுத்தப்பட்ட
மகிழுந்துவின் ஓட்டுனராய்
பொடி அடைக்கப்படும்
கூண்டுக்குள்
சுருங்கிக் கொண்டுஒரு [ச்]சு வாசமற்ற
வாசனாய்த் தவிக்கிறேன்..

படங்களில் மாட்டப்பட்ட
குதிரைகளை
அவிழ்த்துவிடுங்கள்..
மகிழுந்துவைக்
கொஞ்சம் அவ்விடத்தில்
நிறுத்திக் கொள்கிறேன்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...