இறைமை என்பது உணரப்படவேண்டும்..அவ்வாறான இறையுணர்வு ஒவ்வொருவரிலும் இருக்கிறதென அறிவோம்..இறைமையை இறையுணர்வை சோதிப்பதும் சோதனைக்குள்ளாக்குவதும் அதன் நிஜத்தன்மையை சந்தேகிக்கும் செயல்பாடுகளும் தவிர்க்கவொன்னா இழப்புகளை ஏற்படுத்திவிடுமென திருமூலர் சொல்கிறார்..
தூய்மை .(1). அருளூண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்தனாமே .
காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்தனாமே .
அதுபோன்ற இறையுணர்வை அரங்கன் அருளியிருப்பது நம்பமுடியாத ஒன்றாகவே எப்போழ்தும் இருக்கிறது..அதுபோழ்து இந்தச் சிறுவன் ஆறாம் வகுப்புப் படிக்கிறான்..திருப்பறாய்த்துறை விவேகானந்த உயர் நிலைப்பள்ளியில்..அவனின் வகுப்பில் காலாண்டுத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் வெளியிட இந்தச் சிறுவன் எல்லாப்பாடங்களிலும் முதலாக வருகிறான்..அது மட்டுமல்ல..அதுவரையிலான அப்பள்ளியின் ஆறாம் வகுப்பு வரலாற்றில் கணிதத்தில் அவன் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியதை அறிவித்த ஆசான் அச்சிறுவனை அவனின் இருப்பிட உட்காரும் பலகையின் மீதேறி நிற்கவும்..சக மாணவர்களைக்கொண்டு கைத்தட்டவும் பணிக்கிறார்..
மாலையில் அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அவனுடன் சண்டையிடுகிறான்..ஏற்கனவே இருந்த ஒரே ஒரு வெள்ளைச் சீருடைச் சட்டை கிழிக்கப்பட அச்சிறுவன் அவமானத்தில் அழத்தொடங்குகிறான்..அவனின் வேறு சில நண்பர்கள் அந்த பொறாமையாற்பட்ட சிறுவனை மீண்டும் வேறு போட்டியில் வெற்றி கொள் என போதிக்க..உடனே..அந்தத் தோழன் இச் சிறுவனை மிதிவண்டிப் போட்டிக்கு அழைக்கிறான்...
தோழனும் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சிறுவனெனினும் பணக்காரன்..அப்போது அவனிடம் மிதிவண்டியொன்று இருந்தது..ராலே மிதிவண்டிகள் அப்போதைய பண்பாட்டுத் தளத்தின் பொறாமைக்கான காரணி..இச்சிறுவனிடம் மிதிவண்டி இல்லை..கூனிக் குறுகிப்போகிறான்..அவனுடைய தமிழாசிரியர்..அவரின் இடது கை மணிக்கட்டிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும்..செயலற்று..வலது கையால் தான் அவரால் இயக்கங்களை நிகழ்த்த முடியும்..அவரின் பெயர் இப்போழ்தில் நினைவு வர மறுக்கிறது...அவர்..தீவிர சைவப்பற்றாளர்..இச்சிறுவனிடம் ஒருமுறை மாணிக்க வாசகரின் பாடல் ஒன்றைத் தந்து மனனம் செய்யச் சொல்ல..இச்சிறுவனும் அடுத்த நாளே ஒப்பிக்க அவர் பரிசாகத் தந்த காலணா..நாணயத்தை புத்தகப்பையில் வைத்திருந்தான்..அதைக் கொடுத்து ஒரு வாடகை மிதிவண்டி எடுத்து வந்து போட்டிக்குத் தயாரானான்..அக்ரஹாரமே திரண்டு நின்று வேடிக்கைப் பார்த்தது..மேலக்கோடியில் இருக்கும் இச்சிறுவனின் வீட்டிலிருந்து கீழக்கோடி பள்ளி மைதானத்தை ஒரு சுற்று வந்து பெருமாள் கோவிலில் முடிக்கவேண்டும்..
ஏழையாயும் நோஞ்சானாயும் பட்டினியுடனும் இருக்கும் இச்சிறுவனும் பழைய மிதிவண்டியும் கண்டிப்பாக தோற்றுவிடும்..பணக்கார ஆறாம் வகுப்பிலேயே ஆஜானுபாகுவான சிறுவனும் புத்தம் புதிய ராலே மிதிவண்டியும் கண்டிப்பாக வென்று விடுமென நினைத்து..அவன் பக்கம் அத்தனை பேரும் நின்றிருக்க..இச்சிறுவன் பக்கம் அப்போதைய அடுத்த வீட்டு அண்ணன் ராமநாதன் நம்பிக்கையோடு நின்றிருக்க..அரங்கனும் உடனிருக்க..போட்டி துவங்கியது..
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு
சோதியுமாய் இருள் ஆயினார்க்கு
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப் பொற் சுண்ணம் இடித்தது நாமே..
[மாணிக்க வாசகர்..]
மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு
சோதியுமாய் இருள் ஆயினார்க்கு
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப் பொற் சுண்ணம் இடித்தது நாமே..
[மாணிக்க வாசகர்..]
காலணா பெற்றுத் தந்த அந்தப் பாடலை உரக்கச் சொல்லியபடியே இச்சிறுவன் மிதிவண்டியை மிதித்து பெருமாள் கோவில் வாசல் வருகிறான்..பலத்த கரகோஷம்..அந்த ஆறாம் வகுப்புத் தோழன் இச்சிறுவனை வெற்றி கொள்ள முடியாத நிஜத்தையுணர்ந்து..ராலே மிதிவண்டியை வீதியில் போட்டு விட்டு வீட்டிற்குள்ளே ஓடி விட்டதாய் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்..இச் சிறுவனும் வீடு வந்து முகம் கழுவி திரு நீறு பூசி..பெருமாள் கோவிலில் ஆயிர நாமம் சொல்லத் தொடங்கினான்..
ராகவபிரியன்
ராகவபிரியன்

No comments:
Post a Comment