இப்போதைய ஆகச் சாதாரண வெறும் பிரபலம் என்பதால் அதிக லைக் வாங்கும் பாணியில் எழுதப்பட்ட ஒரு கவிதை..உங்களுக்காக...
எனது சமுதாய தரை விரிப்பிலிருந்து
மூன்று இடங்களைக் கத்தரிக்கிறேன்..
மூன்றிலும் இரத்தம் சிந்தப்பட்டு உறைந்திருக்கிறது..
நான்காவது இடத்தில் தான்
அதற்கு பயன் பட்ட கத்தியின் விளிம்பு
துடைக்கப்பட்டிருக்கிறது..
ஒரு கல்லூரியின் மாணவிகளில் சிலர்
பகடியிட்டு பாழ்கிணற்றில் வீசப்படும் முன்
சிந்திய இரத்தத் துகள்கள் முதலிடம்..
ஆணவக் கொலை செய்வதற்குமுன்
அனுபவிக்கப்பட்ட புதரின் அருகில்
மதுரை வீரனின் முகமெங்கும் தெறித்து மீந்த
குருதிப் புனலின் மிச்சங்கள் இரண்டாமிடம்..
குழந்தை கடத்தும் கும்பல் எனக்கூறி
கூறு போட்ட இன்னமும் காயாத மூன்றாமிடம்..
மூன்று இடங்களைக் கத்தரிக்கிறேன்..
மூன்றிலும் இரத்தம் சிந்தப்பட்டு உறைந்திருக்கிறது..
நான்காவது இடத்தில் தான்
அதற்கு பயன் பட்ட கத்தியின் விளிம்பு
துடைக்கப்பட்டிருக்கிறது..
ஒரு கல்லூரியின் மாணவிகளில் சிலர்
பகடியிட்டு பாழ்கிணற்றில் வீசப்படும் முன்
சிந்திய இரத்தத் துகள்கள் முதலிடம்..
ஆணவக் கொலை செய்வதற்குமுன்
அனுபவிக்கப்பட்ட புதரின் அருகில்
மதுரை வீரனின் முகமெங்கும் தெறித்து மீந்த
குருதிப் புனலின் மிச்சங்கள் இரண்டாமிடம்..
குழந்தை கடத்தும் கும்பல் எனக்கூறி
கூறு போட்ட இன்னமும் காயாத மூன்றாமிடம்..
கத்தரித்த தரை விரிப்பில்
அரசியலும் பணமும் அச்சிட்ட
ஒட்டுப்போட்ட வழவழ விரிப்பாய்
மூன்றிடங்களில் ஒட்டித் தைக்கப்பட்ட
சிவப்புக் கம்பளமாய் மீண்டும் விரிக்கிறேன்..
இனி ரத்தம் சிந்தினாலும்
உங்களால் கண்டுபிடிக்க முடியாது...
இதுதான் சிவப்புக் கம்பள வரவேற்பென்பது..
ராகவபிரியன்
அரசியலும் பணமும் அச்சிட்ட
ஒட்டுப்போட்ட வழவழ விரிப்பாய்
மூன்றிடங்களில் ஒட்டித் தைக்கப்பட்ட
சிவப்புக் கம்பளமாய் மீண்டும் விரிக்கிறேன்..
இனி ரத்தம் சிந்தினாலும்
உங்களால் கண்டுபிடிக்க முடியாது...
இதுதான் சிவப்புக் கம்பள வரவேற்பென்பது..
ராகவபிரியன்
No comments:
Post a Comment