எங்கள் வீட்டு செம்பருத்தி
பூத்துக் குலுங்கி
எறும்புகளை இறைத்துக்கொண்டிருக்கும்
ஒரு மத்தியான கொதிவேளையில் தான்
மழை நீர் தேங்கிக் கிடக்கும்
அந்த பழைய பெயிண்ட் டப்பாவை
யாருமே அப்புறப்படுத்தவில்லையென்ற
கோபம் என்னுள்
ஓர்கட்புள்[காகம்] எனக் கத்திக்கொண்டிருந்தது..
நூறாண்டு பழமையான ஒரு வீட்டிற்கு
பெயிண்ட் அடிக்கும் ஓர்பு
அவ்வளவு எளிதல்ல...
அதன் மிச்சங்களை சுமந்து
மழையின் மிச்சங்களையும் சுமந்துகொண்டு
அதே செம்பருத்தியினடியில்
எறும்புகளுக்காகவாவது
கொஞ்சம் தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறது
பெயிண்ட் டப்பா...
மீந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு
அதைக் கழிவறைக்குக் கொடுக்கும்
ஒரு குச்சித்தல் செயலை
கிஞ்சித்தும் செய்ய மனம் வரவில்லை...
ராகவபிரியன்...
இது போன்ற பின் நவீன கவிதைகளை....யாராவது நோபல் கமிட்டிக்குப் பரிந்துரை செய்வீர்கள் என்ற நம்பிக்கையால் இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறான் சாமான்ய பொதுஜனன்...
பூத்துக் குலுங்கி
எறும்புகளை இறைத்துக்கொண்டிருக்கும்
ஒரு மத்தியான கொதிவேளையில் தான்
மழை நீர் தேங்கிக் கிடக்கும்
அந்த பழைய பெயிண்ட் டப்பாவை
யாருமே அப்புறப்படுத்தவில்லையென்ற
கோபம் என்னுள்
ஓர்கட்புள்[காகம்] எனக் கத்திக்கொண்டிருந்தது..
நூறாண்டு பழமையான ஒரு வீட்டிற்கு
பெயிண்ட் அடிக்கும் ஓர்பு
அவ்வளவு எளிதல்ல...
அதன் மிச்சங்களை சுமந்து
மழையின் மிச்சங்களையும் சுமந்துகொண்டு
அதே செம்பருத்தியினடியில்
எறும்புகளுக்காகவாவது
கொஞ்சம் தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறது
பெயிண்ட் டப்பா...
மீந்த தண்ணீரைக் கொட்டிவிட்டு
அதைக் கழிவறைக்குக் கொடுக்கும்
ஒரு குச்சித்தல் செயலை
கிஞ்சித்தும் செய்ய மனம் வரவில்லை...
ராகவபிரியன்...
இது போன்ற பின் நவீன கவிதைகளை....யாராவது நோபல் கமிட்டிக்குப் பரிந்துரை செய்வீர்கள் என்ற நம்பிக்கையால் இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறான் சாமான்ய பொதுஜனன்...
