Friday, April 27, 2018

காகபுஜண்டன்

சுமக்க முடியாத
கற்களால் கட்டிய சுவரில்
அமர்ந்திருக்கும் காகம்
கனத்திருக்கிறது..
அதன் அலகுகளில்
வாசல் கூட்டும் துடைப்பத்தின்
ஈர்க்குச்சிகள்
சொல்லடுக்குகளாய்..
வேலைக்காரிகளின் போட்டியால்
திண்ணையின் ஓரமாய்
ஓளித்து வைக்கப்பட்டிருந்த
கவிதைத்துடைப்பத்தை
இழுத்தெறிந்தது சுகம் காணும்
காகம்..
அதிலிருந்து தெறித்து
விழுந்த ஈர்க்குச்சிச் சொல்லைத்தான்
கூடுடென உருவாக்கும்
எதிர்காலக் காகபுஜண்ட
சந்ததியினருக்கு..
எட்டிப் பிடிக்கும்
உயரத்தில் கட்டிய கூட்டில்தான்
இப்போதும்
உயிரணுக்கள்
உருண்டபடியிருக்கும்...
கூடு கலைக்கப்பட்டாலும்
இன்னொரு
புத்தம் புதிய காகம்
கனமான சிறகுவிரிக்கும்..
அதன் மூக்கும்
ஈர்க்குச்சிகள் சுமக்கும்...
காகத்தின் சொல்லடுக்குச் சிறகுகள்
நூறாண்டுகள்
எட்டிப் பிடிக்க முடியாமல்
பறந்துகொண்டே இருக்கும்....
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...