ஜெயமோகனும் இன்னபிற இலக்கிய ஆளுமைகளும் வைரமுத்துவிற்கு எதிரான குரலை வலுப்படுத்தியபடி இருக்கும் சூழலில் தினமணியில் வெளியான கட்டுரை மிகவும் தொன்மையான பாரம்பர்யங்களைக் கடைபிடிக்கும் தமிழரின் பக்தி வரலாற்றை கொச்சைபடுத்தியதால் அதிர்ந்து போனேன்...ஞர்னபீடம் தமிழுக்கு யார்மூலமாக வந்தாலும் தமிழ்மொழிக்குப் பெருமையென்பதால் அவரின் தகுதியைப்பற்றிய சர்ச்சையில் உள் நுழையத் தயங்கினேன்.. மற்ற மொழிகளில் கடந்த அறுபது ஆண்டுகளில் எட்டுமுறை ஞர்னபீடம் பெற்ற இந்திய மொழி இருக்கிறது...நமது மொழி புறந்தள்ளப்பட்ட அரசியல் நிலைப்பாட்டைச் சார்ந்திருப்பதால் ஆகச்சிறந்த இலக்கியங்களின் வரிசையில் விலகி நிற்க வேண்டியிருக்கிறது..
வர்ஷார்த்த மஷ்டெள ப்ரயதேத மாஸாந்
நிசார்த்த மர்த்தம் திவஸம் யதேத
வார்த்த க்யஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஜேதோரிஹ ஜந்மநா சச
நிசார்த்த மர்த்தம் திவஸம் யதேத
வார்த்த க்யஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஜேதோரிஹ ஜந்மநா சச
இந்த ஸ்லோகம் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் மனதில் சந்தேகத்தைக் கிளப்பக் காரணமானது..பாண்டிய மன்னர்களின் சந்தேகத்தால் மிகச் சிறந்த கவிதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கின்றன...
அந்தப் பாடலின் பொருள்...நான்கு மாத மழைக்காலத்திற்காக எட்டுமாதங்கள் உழைக்கவேண்டும்..இரவின் நிம்மதியான தூக்கத்திற்கு பகலில் உழைத்தாக வேண்டும்..முதுமையின் சார்பு நிலையா வாழ்விற்கு இளமையிலும் மறுமையின் ஓளிக்காக இந்தப்பிறவியிலும் உழைத்தாக வேண்டும் என்று ஒரு வழிப்போக்கன் வல்லபதேவனிடம் தெரிவித்தான்...
அந்தப் பாடலின் பொருள்...நான்கு மாத மழைக்காலத்திற்காக எட்டுமாதங்கள் உழைக்கவேண்டும்..இரவின் நிம்மதியான தூக்கத்திற்கு பகலில் உழைத்தாக வேண்டும்..முதுமையின் சார்பு நிலையா வாழ்விற்கு இளமையிலும் மறுமையின் ஓளிக்காக இந்தப்பிறவியிலும் உழைத்தாக வேண்டும் என்று ஒரு வழிப்போக்கன் வல்லபதேவனிடம் தெரிவித்தான்...
அவரின் சந்தேகத்தைத் தீர்த்து பொற்கிழி பரிசு பெற்றவர் பெரியாழ்வார்..படிப்பறிவற்ற அவர் அரங்கனின் கட்டளையால் பரதத்துவ நிர்ணயம் செய்து பாண்டியமன்னனால் பாராட்டப்பெற்றவர்...அரங்கன் அருளால் அழியாத் தமிழ்ப் பாடல்கள் தந்தவர்...அவரின் வளர்ப்புமகள் ஆண்டாள்...
ஆண்டாளின் விருப்பப்படிதான் அரங்கனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் பெரியாழ்வார்...இது இன்றளவும் வழிவழியாக ஆதாரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வரலாறு...
இடையே புகுந்த பெரியாரிஸ்ட் திராவிட இலக்கிய கர்த்தாக்கள்..கம்பரசம் என்னும் மாபெரும் இலக்கியம் எழுதிய அண்ணாதுரையிலிருந்து...வான்கோழி படைத்த கலைஞர் வரையிலும் இப்போது வைரமுத்து வரையிலும்கூட...தமிழர் பண்பாட்டுடன் ஒன்ற
றக் கலந்த பக்தி இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தி வரலாற்றைச் சிதைக்க முற்படுகிறார்கள்..அவர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை...
றக் கலந்த பக்தி இலக்கியத்தைக் கொச்சைப்படுத்தி வரலாற்றைச் சிதைக்க முற்படுகிறார்கள்..அவர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை...
அரங்கனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி சில வேண்டுதல்களை வைக்கிறாள் ஆண்டாள்..
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய வாய் நேர்ந்து பராவி வைத்தேன்..
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்.
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ...
ஆண்டாள் பிரியதர்ஷினி...
நூறு தடாவில் வெண்ணெய வாய் நேர்ந்து பராவி வைத்தேன்..
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்.
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ...
ஆண்டாள் பிரியதர்ஷினி...
இந்த வேண்டுதலை நிறைவேற்ற மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுசர் சில நூற்றாண்டுகள் கழித்து வரவேண்டியிருந்ததும் வரலாறு...கள்ளழகரைச் சேவித்துத் திரும்புகையில் ..ஆண்டாள்..அண்ணா...என் வேண்டுதல் நிறைவேற்றப்படாமலே இருக்கிறதே என்று நினைவூட்ட அந்த மகான்...ஆண்டாளின் அண்ணன்..அதை நிறைவேற்றித் தந்ததும் இன்றும் கூட திருமணம் ஆக வேண்டிய பெண்கள் கள்ளழகருக்கு நூறு தடா அக்கார அடிசில் தந்து திருமணம் நடந்தேறியதற்கான நன்றிகளை இனிக்க இனிக்கச் சமர்ப்பிக்கிறார்கள்...
வரலாறு மட்டுமல்ல..மக்களின் நம்பிக்கையும் மிக மிக முக்கியம் வைரமுத்து அவர்களே.....வரலாற்றை மட்டுமல்ல எங்கள் நம்பிக்கைகளையும் உங்களால் சிதைத்துவிட முடியாது.... கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியாதீர்கள்...இதை மிக அழகாக மொகம்மது மசூது என்ற கவிஞன் சொல்கிறார்...
Be ready for the injuries
while throwing stones
from inside your
glass house...
Mohamed Masud
சாமான்ய பொதுஜனன்
while throwing stones
from inside your
glass house...
Mohamed Masud
சாமான்ய பொதுஜனன்
No comments:
Post a Comment