Saturday, January 13, 2018

உந்துபூர்வ எழுத்து

ஆழ்மன உணர்வுகளின் நேர்மையான வெளிப்படைத்தண்மையுடைய எழுத்துக்கள் படிக்கும் போதே அந்த உணர்வுக்குள் நம்மைச் செலுத்திக்கொண்டுபோகும் சக்தியுடையது...ஆனால் மன உணர்வுகள் நம்மைச் சுற்றியிருக்கும் உலகின் பாதிப்புகளை உள்ளடக்கியதெனின் நேர்மையென்பது எதுவென்ற கேள்வி எழுகிறது.. இங்கே உளப்பூர்வமான எழுத்திற்கும் உந்துபூர்வமான எழுத்திற்கும் இருக்கும் பேதங்களை எளிய இலக்கிய எழுத்தார்வலர்களால் புரிந்துகொள்ளமுடியாத இயலாமையை உந்துபூர்வ எழுத்துக்கள் பயன்படுத்திக்கொள்கின்றன..உண்மை என்னவெனில் இந்த உந்துபூர்வ எழுத்தாளர்கள்தான் உலகின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்கள் என்ற மாயை தொடர்ந்து புகைமூட்டமென பரவவிடுகிறார்கள்...படிக்கும் வாசகன் கண்களைக் கசக்கிக் கொள்வது உணர்வின் எல்லைதொடும் எழுத்துச் சக்தியில்லை...புகைமூட்டத்தின் எரிச்சல் என்பதுதான் ...அதை உந்துபூர்வ எழுத்தாளர் அறிவார்..உணர்வுபூர்வ எழுத்தாளர்கள் ஒரு ஓரமாய் இந்த வேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. நேர்மையாக..ஆகப்புனித நேர்மையாக...ஆனால் ஒரு உணர்வுபூர்வ வாசகனை எளிதில் ஏமாற்றிவிட முடியாதென்பதை இலககிய உலகம் நன்கு அறியும்..
சாமான்ய பொதுஜனன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...