திருவரங்க திருமன்றாட்டம்....1
RAGAVAPRIYAN THEJESWI IS AN EMINENT WRITER OF YOUR CHOICE Welcome to my literary space! I am Ragavapriyan Thejeswi, a writer of poetry, prose, and spiritual reflections in both Tamil and English. My writings explore: Neo Modernism in Literature and spirituality
Friday, November 12, 2021
Friday, July 23, 2021
தனி மனித மனம் தனக்கிழைக்கப்பட்ட அல்லது தான் அனுபவித்த துன்ப நிகழ்வுகளை மறப்பதற்கே முயல்கிறது...சமுதாய பொதுமன எண்ண ஓட்டங்களிலும் அதை ஒற்றியே துன்ப நிகழ்வுகளோ அல்லது வெறுக்கத்தக்க நிகழ்வுகளோ வரலாற்றில் பதியப்பட்டிருந்தால்... அதை மறக்கவோ அல்லது சிந்தனையிலிருந்து வலிந்து அகற்றவோ
Saturday, July 10, 2021
வேகமெனும் பூச்சி
Wednesday, July 7, 2021
காலத்தின் ஆற்றங்கரையில் நிற்கிறேன்-
குதித்தோடும் நினைவு வெள்ளெமென பெருகி
நுரைத்து நகர்ந்தபடியிருக்கிறது-
துணி துவைக்கும் சப்தங்களை
சதா எழுப்பும் சங்கீதா...
மெளனமான மீனொன்றாக காலைக் கவ்வுகிறாள்...
கொரோணாவின்
அலைகளில் அவள் மரணம்
என் சப்தங்களை
துவைத்தெடுக்கிறது....
சப்தமின்றி அந்த மீன் நகர்ந்து செல்ல...
நதி விரைந்து கொண்டேயிருக்கிறது...
சந்தியா வந்தனம் செய்யும்
சடகோபனின்
அர்க்கியங்கள் மேலேறி மிதக்கின்றன...
விண்ணை நோக்கி
துளித்துளியாய் புறப்பட்டு
என் கண்ணின் வழியே
பெருமழையாய் நதியில் இறங்குகிறது...
மழை ஆற்றில் விழும் சப்தம்
கோவிந்தம் தர்பயாமி....
என ஒரு துவக்காய்
என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது...
காலைக் கவ்விய அந்த சடகோபமீனின்
உடலெங்கும்
நாமங்கள் வழுக்கு கின்றன...
கொரோணாவின் இரண்டாம் அலையின்
நுரை ஆற்றுப் படிகளில்
அப்பிக்கிடக்கிறது....
கால நதியின் சுழித்தோடும்
மரணங்கள் மிதந்து கொண்டிருக்கும்
மேற்பரப்பிலிருந்து
திடீரென ஒரு மீன்
துள்ளி வெளிவந்து கரைந்து நீந்தத்தொடங்க....
படியில் கிடத்திய துண்டை
மீண்டும் தோளில் போர்த்தி
குளிக்காமல் திரும்புகிறேன்...
அணிச்சையாய் துண்டிலிருந்து
ஒரு குழந்தையின் கை
என் கன்னங்களைத் துடைக்கத் தொடங்குகிறது....
ஆறு அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.....
ராகவபிரியன்
Tuesday, April 27, 2021
இன்றைய தொடர் மரணச் சூழலின் அழுத்தம் விதவிதமான வடிவங்களில் பயத்தின் வாசலில் கோலங்கள் இட்டபடி இருக்கிறது...புள்ளிகளாகவும் புள்ளியியல் வடிவமாகவும் வாகனங்கள் ஏறி மிதித்த கோடுகளுடன் கூடியதாகவும் அழிந்தும் அழியாமலும் வளந்து கொண்டே இருக்கின்றன...கூடவே ஏனிந்த துயரத்திணிப்பை அரங்கன் உலக மாந்தர்களின் வாழ்வில் அறிவிப்பின்றி அரங்கேற்றுகிறான் எனப்புரியாமல் உறக்கமும் வராமல் கடந்த சில நாட்களாக இரவு முழுவதும் விழித்தும் உறங்கியுமாகிக் கிடக்கிறேன்..அரங்கன் தனது இருப்பின் அவசியத்தை அவ்வப்போது நிரூபித்தபடியிருப்பது நிரூபணமான ஒன்று...மிருஷ்ட்டான பூஜைகள் செய்யப்படவில்லை என்பதை அரங்கன் இந்த அடியவன் மூலம் உலகிற்கு எடுத்துச் சொல்லியும் கேட்பார் இல்லை...இனி ஆன்மீக எழுத்துக்களை உருவாக்குவதில்லை என்ற எனது முடிவை மறு பரிசீலனை செய்ய அரங்கன் உத்தரவிடுகிறான்...அரங்கன் இருப்பு அசைக்க முடியாதது...ஆனால் எனது ஆன்மீக எழுத்தின் தாக்கம் அசைக்க வேண்டியவர்களை ஆணவத்திற்கு ஆட்படுத்தி எனது இருப்பை அசைத்துப் பார்ப்பதை அரங்கனிடம் கூறுகிறேன்...வெளியே குடுகுடுப்பைக் காரனின் உளறல் புரிபடவில்லை...மணி விடிவதற்கு முன்னான பின்னிரவின் நான்கு எனச் சுட்ட வெளிவருகிறேன்...அரங்கனை தேடத்தொடங்குகிறேன்...வாசலில் எதிர் வேப்ப மரத்தில் வானில் கோவிலின் உள் பிரகாரங்களில் கோபுரத்தில் கருடனிடத்தில் கருணையிடத்தில் ....அரங்கனைக் காணோம்...நேற்றிரவு ஆச்சாரியரிடம் கேட்கிறேன்...
ஆன்மீக வாழ்வின் பகுதி புதிர்கள் நிறைந்தது மட்டுமல்ல...புரியாததும் கூட என்று சொல்லியபடியே தனக்கு ஹயக்கிரீவராய் அரங்கன் காட்சி தந்ததை அருமையாய் விளக்குகிறார்...எங்கே பக்தர்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்களோ அங்கே நான் பூஜைகளை ஏற்பதில்லை ....அதே போல் எங்கே பூஜைகள் முறையாக செய்யப்படவில்லையோ அங்கே பக்தர்கள் துன்பம் அனுபவிப்பார்கள் என்று அரங்கன் கூறியதாகத் தெரிவிக்கிறார்....முரண்படாத பூஜைகளையும் அதன் முறைமைகளையும் விளக்க ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டு விழிக்கிறேன்...ஆச்சாரியர் எதிரே ஆக அமைதியாக
ஸ்வத ஸித்தம் சுத்தஸ்படிகமணி பூப்ருத்பரதிபடம்
ஸூதா ஸ்த்ரீசீபிர் த்யுதிபிரவதாத த்ரிபுவநம்
அ நந்தைஸ் த்ரய்யந்தைர நுவிஹித ஹேஷா ஹலஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவத நமீடீமஹி மஹ:
அரங்கன் அடியவர்களைக் காக்க ஹயக்கிரீவராக அவதரிப்பான் தேவையான காலங்களின் நிகழ்விடங்களில்...அப்படியான அரங்கனின் ஹயக்கிரீவ வடிவம் தூய்மையானது வெண்மையானது...ஹயக்கிரீவனிடமிருந்து வரும் ஹல ஹல ஒலி வேதங்களின் வடிவம்...ஹயக்கிரீவனே ஓம் எனும் வடிவமுடையவன் தான்...என்ற பொருள் படும் ஸ்லோகத்தைச் சொல்லி மறைகிறார்....ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது...அரங்கன் உக்கிரமாயிருக்கிறான்...வாசலில் மீண்டும் அரங்கனைத் தேடுகிறேன்...வேப்ப மரத்தில் ஹயக்கிரீவ உருவம் காட்டியவன் இன்று மேகவடிவில் உருவம் காட்டி நொடிப்பொழுதில் கரைந்து போகிறான்...அதை உங்களுக்காக இங்கே படமாகத் தந்திருக்கிறேன்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்...
என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...
-
இது சோக இருள் சூழ்ந்த தீபாவளி அந்த இருள் வானில் ஆறுமாதம் முன் நீண்ட மரணத்தின் கரம் இன்று வெடிகுண்டுகளை திரியின் முனை நீக்காமலேயே கொளுத்திக...
-
பத்தாம் திகதியன்று உடலில் அனல் கொதித்த அன்று தான் தில்லியில் மனித வெடிகுண்டு வெடித்திருக்கிறது. நேற்றுதான் உடல் நிலையில் சற்று முன்னேற்றம்...
-
மானுட இருத்தலை வெளிக்காட்டுதல் தேவையற்றது. எனினும் மனிதன் தனது இருத்தலின் மேல் வெளிச்சம் பாய்ச்சியபடியேதான் இருக்கிறான். தன் மீதான பிரபஞ்சத்...
-
ஸ்ரீஸ்துதி 6. இந்து மத ஆன்மீகத்தின் தத்துவப் பார்வை உலகளாவிய ஒன்று. அது வாழ்வின் புயற் காலங்களில் அழிக்கவியலா வேள்வித் தீயை வளர்க்கும்...
-
HATRED IS BLUE AND UNFINISHED From the day I could see things through my Brahmin eyes The entire world around me shedding Brahmin hatred.....


