Monday, June 10, 2019

வாசக சீதையின்
மரண நிமிடங்கள்
சுற்றி இடது எழுத்து அரக்கிகளின்
முரண்பனுவல் மாநாடு..
அசோக மரத்தின்
வலது கிளையில்
ஒரு கவி வானரன்..
நம்ப மறுக்கிறாள் சீதை..
நீ வலதா இடதா..
கவலையில்லை..
எழுத்தின் தூதன் என்பதை
நிரூபிக்கச் சொன்னாள்..
வானரன் சொல்கிறான்
என்பதுகளில்
மராட்டிய தலித்திலக்கிய
வேள்வித் தீயை
தமிழ் வானிலிருந்து
இடது அரசுரர்கள் குலைத்தபோது...
கீழிறிந்து
அவர்களை நோக்கிக் குலைத்திருக்கிறேன்..
அட....
கேட்டு வாங்கிப் போட்ட
மொக்கை படைப்புகளால்
எழுத்தரண்மனைகளை
பரதஇடவர்கள் ஆக்கிரமிக்க
மாற்று நவீன மர உரியின்றி
நீயும் நானும்
வலது புரமாய்
கானகம் ஏகினோம்..
நிராகரிக்கப்பட்ட நம் இலக்கியப்
பூணூல் என் வலது தோளில்
கிடந்ததே..
அட ஆமாம்...
சீதா...பேசும்மா...
உன்னைக் கொத்த வந்த
பின் நவீன காக்கையை
விரட்டிக்கொண்டு
பின்னாலேயே ஓடினேனே..
அதை அருமையான கவிதையென்றாயே...
இன்னுமா நம்ப மறுக்கிறாய்...
மெளனமாய்
இடது தோளிலிருந்த
கூந்தலை வலது தோளில்
மாற்றியபடியே..
நீ ராம தூதனா
ராமனே தானா...இல்லை
கலப்பட ராவணனின் மாயையா....?
சொல் ...
வாசக சீதை மேலும் சொல்கிறாள்...
சொல்லாவிட்டால்
உனக்கான லைக்குகளை
இரண்டு முறை அழுத்திவிடுவேன்...
ஐயையோ...
வேண்டாம்...
இந்தா விருது மோதிரம்..
இப்போதாவது நம்புகிறாயா...
நான் வெறும்
பிரபல எழுத்தாளந்தான்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...