Wednesday, December 25, 2019

எனக்குத் தெரியும்
நீங்கள் என்னை விரும்புகிறீர்களென்று..
தொய்வற்ற பதிவுகளுக்கான
உங்கள் கண்கள்
தேடித் தேடி அலுத்த
கடைசீ நொடிகளில்
என்
பதிவுகளைப் படிக்க நேர்வதால்
விருப்பமோ கருத்தோ
இடும் உங்கள் விரல் பூக்கள்
உதிர்ந்து அயர்ந்திருக்கக் கூடும்..
நான் அறிவேன்..
என் எழுத்துக்களுக்கான
வான இருட்டில்
என்னை இனம் காண
அயராது நோக்கும்
உங்கள்
இலக்கியத் தர
பார்வை உயரங்களில்
திடீரென
எரி கல்லாய் சறுக்கி விடுகிறேன்..
என்னைப்
படிக்கத் துடிக்கும்
உங்கள் இதயத்தின்
சீரான சப்தங்கள்
பார்வைக்கு வழிகாட்டும்
திசை மாணிக்காக
சற்றே நின்று
புறப்படும்..
அதையும் அறிந்ததால்
நான் சொல்வேன்..
கொஞ்சம்
அமேசான் கிண்டிலுக்குச்
செல்லுங்கள்..
ஆங்கிலமும் தமிழும்
அதன் அதிதீவிர
இலக்கிய
மின்னல்களும் அடங்கிய
எரிகல் விழுந்துவிடாத
என் வானத்தை
தெளிவாகப் பார்க்கலாம்..
ராகவபிரியன்
I know my dear friends
you all like me..
your tired eyes
and finger flowers
have fallen
to naught
on reaching my post..
Dear friends
I know
when your eyes
staring at my sky
i had
fallen as a meteor
in your
vision's literary screen
Dear friends
The train sounds of
your heart beats
simply stopped
on a station
without any
literary signal..
Friends ...
Don't be frightened
Browse
Amazon.in..Amazon.com
and all Amazon sites..
My literary works
blossom with a green signal
and
from the window
of your running train
you could see
the amazing sky
of literary mine..
Ragavapriyan Thejeswi

Tuesday, December 17, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகள்..
எனது பட்டப்படிப்பு இரண்டு வருட இடைவெளிக்குப் பின் 1981ல் முதல் வகுப்புத் தேர்ச்சியுடன் முடிவடைந்தது..வேலை பார்த்துச் சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம்..சென்னை சென்றேன்..எனது உறவினர் தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை அறிந்தவனால் தான் வாழ்வின் தடங்களில் சொந்தக் கால்கொண்டு நடக்க முடியும் என்றார்...நான் என்னை முதுகலைவணிகவியலில் சேர்த்து விடச் சொன்னேன்..இரண்டு வருடங்கள் அதற்காகும் செல்வுகளையும் எனது பராமரிப்பிற்கான செலவுகளையும் கணக்கிட்டு..ஒரு புது உத்தியைக் கண்டு பிடித்தார்..ஒரு ஆடிட்டரிடம் என்னை ஆர்டிகிள்ட் கிளார்க்காகச் சேர்த்துவிட்டார்..
அங்கே நடந்த கொடுமைகளை..ஒரு ஏழை ஆடிட்டராகும் கனவைக் காணக்கூடாதென்ற உண்மையை உங்களுக்கு அடுத்தடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்..மீண்டும் திருவாரூர் வந்தேன்..விடிந்தால் என் வீட்டார் பேசப்போகும்.. வேலையற்ற பட்டதாரியின் மேல் வீசப்போகும் வார்த்தை கணைகளுக்குப் பயந்து ஓசி ரயில் ஏறி தஞ்சை வந்துவிடுவேன்..தஞ்சை பேருந்து நிறுத்தப் புத்தகக் கடையில் சில சமயம் தஞ்சை பிரகாஷ் இருப்பார்...தம்பி சாப்பிட்டாயா...எனக் கேட்கும் அவரின் குரல் இன்னமுன் என் உள் மனதில் கேட்டுக் கொண்டிருக்கும்..எப்படியும் ஒரு தேனீர் வாங்கிக் கொடுத்துவிடுவார்...கணையாழி வாங்க காசில்லை என்பதைச் சொன்னவுடன்..ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் புத்தகக் கடையிலிருந்து எனக்கு ஒரு கணையாழி புத்தகம் தருவார்..எங்காவது போய் படித்துவிட்டு திரும்பக் கொடுத்துவிடு என்பார்..எனது பெயரை நான் அவரிடம் பாபு என்றுதான் கூறியிருந்தேன்..ராகவபிரியன் என்பதை அவராக கண்டுபிடித்தது பத்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு சுபமங்களா வாசகர் வட்ட நிகழ்வில்..
சில சமயம் நடந்தே திருவையாறு வரைச் சென்றுவிடுவேன்..ஒருமுறை திருவையாறு அருகில் உள்ள கடுவெளி கிராமம் வரை வந்துவிட்டேன்...ஒரு முதியவர் அமர்ந்திருந்த புளியமர நிழலில் நானும் அமர்ந்து ஐயா இது என்ன ஊர்..என்றேன்..கடுவெளி தம்பி...சரி கடுவெளிச் சித்தரைப் பற்றி கேள்கிப்பட்டிருக்கிறாயா...எனக்கேட்க..இல்லை என்றேன்..
மண்புழுவை பாம்பாக ஆக்கக்கூடிய சக்தி உள்ளவர் என்றவுடன்..ஆச்சரியமாய்ப் பார்த்தேன்..நீ யார் என்றார்..வேலையில்லாத பட்டதாரி என்பதைச் சொல்லக் கூசிய நாவால்...கவிஞன் என்று கூசாமல் பொய் சொன்னேன்..கையில் கணையாழி வேறு இருக்கிறது...ஆனால் அந்தப் பெரியவர் தம்பி..காடுவெட்டிச் சித்தர் ஒரு பாடல் உலகப் புகழ்பெற்றது தெரியுமா..என்றார்..
நந்த வனத்தில் ஓர் ஆண்டி..அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி..அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
எனது இதயத் துடிப்பின் பரவச வேகம் எல்லை கடந்து செல்ல..அவரோ காடுவெளிச் சித்தரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார்..
மெல்ல எழுந்து பேருந்தில் ஏறி தஞ்சை வந்தேன்..கடையில் எனது ஆசான் இல்லை..கணையாழியைக் கொடுத்துவிட்டு ரயில் நிலையம் வர..நினைவெல்லாம் அந்தப் பாட்டில் இருந்தது..
காடுவெளிச் சித்தரைப் பற்றி நிறைய படித்தேன்..
அதன் தாக்கத்தில்
படிக்கும் வயதில் வெடித்துப் பேசாதே
நொடிக்கும் நடையில் விழுதல் வேண்டாமே
தடுக்கும் கல்லொன்றை நகர்த்திப் பார்
அடுக்காய் வெற்றிகள் அடைவாய் நீ
ராகவபிரியன்..
எப்போது தூங்கினேன் எனத் தெரியவில்லை..வண்டி நாகூர் வந்திருந்தது..மீண்டும் அடுத்த வண்டியில் ஆரூர் வர அன்றிலிருந்து இன்று வரை பயணப் பொழுதுகளில் சில சமயம் தூக்கம் வந்தாலும் கவிதை மட்டும் வருவதேயில்லை...
கடுவெளிச் சித்தரின் இன்னொரு பாடல் உங்களுக்காக..
வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை
செல்லும் பொழுது செலுத்துவேன் சிந்தையை
அல்லும் பகலும் உன்னையே தொழுவேன்
கல்லும் பிளந்து கடுவெடுயாமே.’
[கடுவெளிச் சித்தர்]
தொடர்வண்டிச் சித்தன்

Sunday, December 15, 2019

வாழைப்பட்டைகள் வேய்ந்த
மலையாளக் குடையினடியில்
குடியிருப்பதாகிப்போனது
அவளின் வாழ்வு..
தூறல் தூவிக்கொண்டிருக்கும்
விதியின் சிகப்பு நாளொன்றில்
மகிழ்ந்துவில்
குழந்தை மகளை
கணவனிடம் விட்டுவிட்டு
போட்டித் தேர்வின்
கணிணித் திரையில்
கேள்விகளுக்காகக் காத்திருக்கையில்
நூலேணியொன்றின்
படிகள் அறுந்துவிழுவதைக் காண்கிறாள்..
அப்பாவிடம்
எதையெதையோ கேட்கப் போகும்
மகளின்
ஈர உள்ளாடையை
கணவனால் மாற்றிவிட முடியுமாவென
யோசிக்கும் பொழுதுகளில்
வெள்ளைக் காகம் ஒன்று
வெண் திரையில்
அலகால் குழந்தையை
அப்படியே தூக்கியது..
இந்திய ஜனாதிபதி
கோவிந்தன் கோவிந்த் ராம் நாத் ராம்னாத் கோவிந்த்
என்ற விடைகளில்
எது சரியானதெனும்
மன யாசிப்பில்
குழந்தையின் அழுகுரல் தொட்டில்
அவள் முன்னே
எழுவதும் விழுவதுமாயிருந்தது..
தேர்வு முடியும் முன்
வெளியேறும் அனுமதியில்லையெனும் போதில்
கற்பாறைகளில்
அவளின் மகிழுந்துவை
தலை குப்புற
ஓட்டிக்கொண்டிருந்தான் கணவன்..
எங்கிருந்தோ
அவளின் ஜன்னலின் அருகில்
குரங்கொன்று
எட்டிப் பார்க்க..
அதனின் மடிகவ்விய குட்டியை
அது தவற விட்டது
அறிந்து
கோவிந்தா என அலறினாள்..
அருகிருந்த
தேர்வெழுதும் சகபோட்டியாளப் பெண்
சன்னக் குரலில்
ராம் நாத் கோவிந்த்
என்றபோது
கணிணியின் திரை
இழுத்து மூடப்பட்டுவிட்டது..
ராகவபிரியன்

Sunday, December 1, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்..1+2
ஆன்மீக அனுபவங்களைப் பற்றிய பொதுமதிப்பீடுகள் எதுவாக இருந்தாலும் சுயமதிப்பீடு நேர்மையாக இருந்தால் அரங்கனை கண்டிப்பாக உணரமுடியும்..அரங்கனை அனுதினமும் தியானிப்பவனுடன் அரங்கன் தொடர்ந்து அவனின் மனதுள் சயனித்திருப்பது நிஜம்..பகவான் அர்ஜுனனுடன் யுத்த களத்தில் கூடவே இருந்தும் அர்ஜுனனால் பகவானை முழுவதும் உணரமுடியவில்லை..அர்ஜுனன் பகவானைப் பார்த்துக் கேட்கிறான்...
கதம் வித்யாம்ஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்
கேஷூ கேஷூ ச பாவே ஷூ சிந்த்யோஸி பகவந்தம்யா..!!
அரங்கா..நான் உன்னையே சிந்தித்துக்கொண்டிருக்கையில் நீ எந்த உருவில் என்னுடன் இருக்கிறாய் என்பதை அறியமுடியாமல் தவிக்கிறேன்..உன் உருவங்களில் ஒன்றையாவது எனக்குக் காட்டித்தரமாட்டாயா...?
இது அர்ஜூனனுடைய கேள்வியென்றாலும் கடந்த ஐம்பது வருடங்களாக என் மனதிலும்...எத்தனையோ நூற்றாண்டுகளாக உங்கள் மனதிலும் உள்ள கேள்விதான்..இன்று கும்பகோணம் அருகில் உள்ள கருவளர்சேரி கோவிலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் எனது ஓய்வு வாழ்வின் திட்டமிடாத பணிகளின் திணிக்கப்பட்ட அமைப்பியல் வாழ்வின் மிச்சங்களில் ஒன்றாகிப்போனது...தட்பவெட்ப நிலையின் சாதகமற்ற நிலையிலும் கடும் மழைவெள்ளம் கண்டிப்பாக எதிர்வரும் என்ற சூழலிலும் எனது போர்ட் ஐக்கானைக் கிளப்பிக்கொண்டு..விடியலில் அரங்கனை தியானித்தேன்...அரங்கா உடன் வருவாய்..வேறெதுவும் சொல்லாமல் கவனத்தை வண்டியைச் செலுத்துவதில் செலுத்தினேன்..செங்கிப்பட்டிக்கு சற்று முன்பு...எனது மகிழுந்து நூற்றுப்பத்து கி.மீ வேகத்தில் இருக்க கருடாழ்வார் தாழப்பறந்து வண்டியின் முன் ஒரு வட்டமிட்டு பின் மறைந்து போனார்...தொடர் தூறலில் கும்பகோணம் சாலையை விட்டு திருவாரூர் சாலையில் செல்வதைக்கூட அறியாமல் சாலியமங்கலம் வர உடன் வந்த மாப்பிள்ளை கூகுளில் பார்த்து அப்பா இங்கிருந்து பாப நாசம் வழி செல்லப்போகிறீர்களா எனக் கேட்டவுடன் தான் ...வழி மாறிப்போனது தெரிந்தது..
அதே கூகுளிடம் அவர் வழி கேட்க இது அரங்கன் செயல் என உணர்ந்த நான் அம்மாபேட்டை வழியாக கிராமத்துச் சாலையொன்றின் வழி வலங்கைமான் அடைந்து கருவளர் சேரி அடைந்தோம்..அதுவரை மழையின்றி சிறிது இளவெயிலும் தலை காட்ட பயணம் தடையின்றி இலக்கடைய...கருவளர் சேரியில் வலக்கையை தலைக்குக் கொடுத்தபடி சற்றே தலை தூக்கி என்னைப்பார்த்தார் அரங்கன்...
அஹமாத்மா குடாகேஸ ஸர்வபூதாஸ்யஸ்தித:
ஆஹமாதிஸ்ச மத்யம் ச பூதா நாமந்த ஏவச!!
அர்ஜூனா நான் உன்னிடத்தில் ஆத்மாவாக இருக்கிறேன்..நானே முதலும் நடுவும் முடிவுமாக இருக்கிறேன்..அது மட்டுமல்ல...
ஆதித்யா நாமஹம் விஷ்னுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமா ந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷ்த்ராணாமஹம் ஸஸீ..!!
நான் அதிதியின் புதல்வர்கள் பன்னிரண்டாயும் அதில் மஹாவிஷ்னுவாயும் ஓளிரும் சூரியனாயும் நாற்பத்தொன்பது வாயுதேவர்களுள் தேஜஸ்வியாயும் ..சந்திர மண்டலத்தின் தலைவனான நிலவாகவும் இருக்கிறேன்...
இங்கே கருவளர்சேரியில் இன்று உன்னை வரவழைத்து அருள் தர கொஞ்சம் தலைதூக்கிப் பார்பவனாகவும் இருக்கிறேன்..என்றும் சொல்வதாகப் பட..மனதில் தோன்றிய திவ்ய பிரபந்த பாடல்களை உரத்துச் சொல்லத்தொடங்கினேன்..
அண்ட குலத்திற்கு அதிபதியாகி
அசுரர் ராக்கதரை இண்டகுலத்தில்
எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டகுலத்தில் உள்ளீர் வந்து
அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டை குலத்தைத் தவிர்த்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே...
[பெரியாழ்வார்]
திருவரங்கன் திருவடிகளே சரணம்...
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...