Friday, November 12, 2021

 திருவரங்க திருமன்றாட்டம்....1

மனதின் கனத்த பொழுதுகள் செலுத்தும் திசைகளை கால்களால் தடுக்க முடிவதில்லை...தன்னிச்சையாய் அலைந்து திரிந்து முடிவில் பெரும்பாலான மனித கால்கள் தங்கள் நடையை முடிவுக்குக் கொண்டு வருமிடம் கோவில் என்பதை மறுப்பது ஆகக் கடினம்...குபேரனின் பூஜைக்கான மலர் தருவித்தலின் தாமதம் யஷனின் காதல் மனத்தின் கனம் என்பதறிந்து சபிக்கப்பட்ட யஷன் மேகத்தை தூதுவிடும் கவிதை வரிகள் மிகுந்த பாரம் சுமப்பவைகள்...காளிதாசனின் கால்கள் யஷனின் கால்களுக்குள் புகுந்து வடக்கு நோக்கி மேகப் பார்வையுடன் நடப்பதின் மேலதிக கனம் இந்த அரங்கனடிமையின் கால்களை உரக்கடையில் கொணர்ந்து சேர்த்ததை எங்ஙணமுரைப்பது?
தொடர் மழையும் அதன் நம்பமுடியா தாக்கங்களும் விவசாயிகளின் வாழ்வை மூழ்கடிக்கும் முயற்சியில் பாதி வெற்றி பெற்றுவிட்டதைக் காண முடியும்...இக் கொடிய கணங்களில் எங்கள் வயலில் களையெடுக்கப்பட்ட பின்னான அவசியத் தேவையான யூரியா உரம் சென்னையில் தொடர்வண்டி காத்திருப்புக் கிடங்கில் கிடப்பதாகக் கேட்ட செய்தியும் நிற்காத மழையின் சப்தமும் அரங்கனின் உடல் நிறம் தாங்கித் தவழ்ந்து கொண்டிருக்கும் மேகங்களின் மேல் காளிதாசனின் கவிதையைவிட வீரியமிக்க பாடல் ஒன்றை வீசச் செய்தது...உரத் தட்டுப் பாடும் தீராத சாமான்ய விவசாயியின் பயிரிடும் போராட்ட ஓலமும் இந்த அரங்கனடிமையை பெருமாள் கோவிலின் குலசேகரப் படியின் முன் நிறுத்தியது...
மன்றாடும் இந்த அடியவனின் கோர ஓலம் தாங்கிய மேகங்கங்களை அரங்கன் ஆச்சாரியரிடம் அனுப்பி வைத்தான் போலும்...பாரம் மிகுத்த அந்த மழைப் பொழுதின் தூறலில்
தாபந் க்ஷிபந் ப்ரஸவிதா ஸூமநோ கணாநாம்
ப்ரச்சாய சீதள தல:ப்ரதிசந் பலாநி
த்வத ஸங்கமாத் பவதி மாதவி ஸப்த போஷ:
சாகா சதைரதிகதோ ஹரிசந்த நோசஸேள...
[ஆச்சாரியன் நிகம்மாந்த மஹா தேசிகர்]
[இந்த பூமியில் எங்களைத் தாங்கும் அன்னையே அரங்கன் ஹரிசந்த்ர மரமாய் உன்மீது கிளை பரப்பிக்கொண்டிருக்கிறான்...அவனின் நிழலில் அதாவது உன் மீது சந்தன மலர்கள் பொழிகின்றன..எம்போன்ற பக்தர்களுக்கான ஞானப் பழங்களை அந்த மரம் வெகுவதிசயமாக கொணர்ந்து உதிர்க்கும்..அரங்கனின் செழிப்பிற்காக நீ உன்னையே தருவது போல்...]
எங்களுக்காக அரங்கன் தந்த வயலிற்கான யூரியா உரங்களை உடனே தரமாட்டாயா...என்று மன்றாடத் தொடங்கினேன்...மழை சற்றே தன் கனத்தைக் குறைத்து வழிவிட இதோ உரக்கடை நோக்கிய என் காலகளின் புறப்பாடு...
மழைக்கும் மேகத்திற்கும் அதிகாரத்திற்கும் மனதின் அன்பின் கனத்திற்கும் காத்திரமான ஒரு கவிதையைப் படைத்த காளிதாசனின் பாடலின் ஆங்கில வடிவம் ஒன்றை இங்கே தருகிறேன்...
ராகவபிரியன்
Such clouds the ending of the world presage;
you minister to form at will. Though kin
I plead for are by power detained, better
to be by majesty refused than win
an approbation of base parentage.
[Translated kalidasa poem by poet Colin John Holcombe]

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...